விஜய்–அட்லீ கூட்டணியில் மெர்சல் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது,வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது.
இந்த வாரம் விஜய் ஓய்விற்காக பார்சிலோனா சென்றுள்ளார்.இந்நிலையில் விஜயை பிடிக்காத சில விஷமிகள் சமூகவலைத்தங்களில் விஜய் தலைமுடி சிகிச்சைகாக பார்சிலோனியா சென்றுள்ளார் எனவும், மூன்று மாதம் கழித்து தான் இந்தியா திரும்புவார் எனவும் புரளி கிளப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: மெர்சல் டீஸருக்காக காத்துக்கொண்டிருக்கும் பிரபலம்.?

Advertisement

நாம் விசாரித்த வகையில் இது முழுக்க முழுக்க விஜய் அவரது குடும்பத்தினருடன் ஓய்வெடுக்கவே சென்றுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் விஜய்க்கு முன்பே அவரது குடும்பம் முழுவதும் பார்சிலினியா சென்றுவிட்டனர்.
மெர்சல் படம் திரைக்கு வரவிருப்பதால்,எப்படியும் தீபாவளி அன்று சென்னை வந்துவிடுவாராம் விஜய் சென்னை வந்தபின் ஏ. ஆர். முருகதாசுடன் தனது அடுத்தப்படதிற்கான வேலைகளை துவங்க உள்ளார் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாரோ விஷமிகள் கிளப்பிவிட்ட புரளியால் விஜய் ரசிகர்கள் தற்போது கடும்கோபத்தில் உள்ளனர்.

Advertisement
Advertisement