விஜய்–அட்லீயின் கூட்டணியில் உருவான மெர்சல் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.டீசர் வெளியான அன்றே உலகசாதனை படைத்து அசத்தியது.
“நீ பற்ற வைத்த நெருப்பொன்று, பற்றி எரிய உன்னை கேட்கும்,நீ விதைத்த வினையெல்லாம், உன்னை அறுக்க காத்திருக்கும்” என்ற வசனத்துடன் டீசர் மாஸாக ஆரம்பிக்கிறது.

அதிலும் அதை பேசுவது மேஜிக் செய்யும் விஜய் தான் என்று தெளிவாக தெரிகின்றது,மேலும், தன் தந்தையை கொன்றவனை பழிவாங்கும் வேகத்துடன் அவர் பேசுவது போலவும் தெரிகின்றது.அடுத்த படியாக கிரமத்து விஜய்யை காட்ட, அது தமிழகம் போல் எங்குமே தெரியவில்லை.
அதே நேரத்தில் அங்கு அப்பா விஜய் குஸ்தி சண்டை போடுவராக வருவது போல் தெரிகின்றது, படத்தில் மருத்தவராக வரும் விஜய் குறித்து எங்குமே தெரியவில்லை.

Advertisement

இதையும் படிங்க: மெர்சல்’ படத்தில் என் கேரக்டர் பேரைக் கேட்டாலே சிரிப்பீங்க! – யோகி பாபு

புறாவை காட்டி Peace Bro என்று சொல்வது விஜய் சமீபத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை கண்டுக்கொள்ளாதீர்கள் என்று சொன்னது நினைவிற்கு வருகின்றது.
விஜயின் நடிப்பும் அட்லீயின் இயக்கமும் வரும் தீபாவளிக்கு சரவெடியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை எனலாம்.

Advertisement
Advertisement