வேலைக்காரன் இடத்திற்கு பிறகு தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கையில் வைத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது "இன்று நேற்று நாளை" என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில் இந்த படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக கமிட் ஆகியுள்ளாராம். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்து வரும் எந்திரன் 2.0 படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்தில் AlexaLF என்ன அதிக தொழில் நுட்பத்தை கொண்ட கேமரா ஒன்றை ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா பயன்படுத்த உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் சிறப்பு என்னவெனில் இந்தியாவிலேயே இந்த படத்தில் தான் இந்த கேமராவை பயன்படுத்த உள்ளனராம்.




