உலக நகையாகன் கமல் நடிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியான “தேவர் மகன்” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்திய தேசிய விருதினை 1993 ஆம் வென்ற இந்த திரைப்படம்,1993 அம் ஆண்டு ஆஸ்கருக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் இந்த படம் சிறந்த தமிழ் திரைபடத்திற்கான தேசிய விருதை பெற்றது.
இயக்குனர் பரதன் இயக்கிய இந்த படம் அப்போதே பல சர்ச்சைகளை சந்தித்தது. ஜாதி பிரச்சனை மற்றும் வன்முறை அதிகமாக இருக்கிறது என்று இந்த படத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. இருப்பினும் இந்த படத்தில் சிறப்பாக நடித்ததர்காக நடிகர் கமலுக்கு தேசிய விருது அளவிற்கு பேசபட்டது.
கமல் மற்றும் நடிகர் திலகம் நடித்த இந்த படத்தில் நடிகை கௌதமி கமலின் காதலியாக நடித்திருந்தார். இருப்பினு ம் கமல் அந்த படத்தில் ரேவதி நடித்த கத்தபத்திரத்தை திருமணம் செய்துகொள் வார். பல பிரச்சனைகளை இந்த படம் சந்தித்தாலும் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்த படத்தில் நடிகை கௌதமி நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகை ஐஸ்வர்யா தான் நடிக்கவிருந்தாரம். ஆனால் அந்த படத்தின் மற்றொரு நாயகியின் கால் சீட் பிரச்சனையால் தேவர் மகன் படத்தின் நாயகியையே மாற்றிவிட்டார்களாம். இதனால் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்காமல் போய்விட்டது என்று நடிகை ஐஸ்வர்யா வருத்தத்துடன் கூறியுள்ளார்.