ரக்க்ஷா பந்தன் வட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பெண்கள் தங்களின் சகோதரர்கள் மற்றும் சகோதரராக கருதும் ஆண்களின் கையில் வண்ணமயமான ராக்கி கயிறுகள் கட்டுவது இந்நிகழ்ச்சியின் சிறப்பு. ராக்கிகள் கட்டப்பட்ட ஆண் அந்தப் பெண்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்குவது வழக்கம்.
Happy Raksha Bandhan! Spent some quality time and had a great afternoon with the bestest brother ever…Vijay Anna!! It’s a super feeling to know that a brother is always going to be there for you no matter what! ??❤️ pic.twitter.com/WXbU2ZWHuY
— Sayyeshaa (@sayyeshaa) August 26, 2018
நாடுமுழுவதும் கோபிடடபட்ட இந்த பண்டிகையில் சில திரைப்பட பிரபலங்களும் தாங்கள் சகோதரராக நினைக்கும் நபரின் கையில் ராக்கி கட்டி தங்களது சகோதர துவத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் ;”வனமகன்” பட நாயகி க்ஷேயிஷா , இயக்குனர் ஏ எல் விஜய்க்கு ராக்கி கட்டி தனது பாசத்தை பொழிந்துள்ளார்.
தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சியமானவர் நடிகை க்ஷேயிஷா. இவரை முதன் முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்தியது இயக்குனர் ஏ எல் விஜய் தான்.
அதற்காக என்றும் இயக்குனர் ஏ எல் விஜய்யை தனது சகோதரர் என்று அழைத்து வந்தார் நடிகை க்ஷேயிஷா. இந்நிலையில் நேற்று(ஆகஸ்ட் 26) ரக்க்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு இயக்குனர் ஏ எல் விஜய்க்கு ராக்கி கட்டிவிட்டு மகிழ்ந்துள்ளார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை க்ஷேயிஷா.