தமிழில் "விரும்புகிறேன்,கந்தசாமி திருட்டு பயலே " போன்ற படங்களை இயக்கிய சுசிகனேசன் மீது சென்ற வருடம் கவிஞர் லீனா மணிமேகலை தன்னுடைய ஃபேஸ்புக்கில் 2005-ம் ஆண்டு தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை #MeToo என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், இயக்குநர் சுசி கணேசன் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்ததாகவும் கத்தியைக்காட்டி தான் அவரிடமிருந்து தப்பித்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து லீனா மணிமேகலைமீது இயக்குனர் சுசி கணேசன் மான நஷ்டயிடு வழக்கையும் தொடுத்துள்ளார்.Breaking : @Amala_ams stands by #LeenaManimekalai's sexual harassment allegations against #SusiGanesan, calling him a man with 'utterly low respect for women'.. She says she also had unpleasant incidents while shooting for TP2.. Bold and frank! pic.twitter.com/vPaRI48tQz
— Kaushik LM (@LMKMovieManiac) October 24, 2018
இந்நிலையில் சுசிகனேசன் இயக்கிய திருட்டு பயலே 2 படத்தில் நடித்த நடிகை அமலா பால் சுசிகனேசன் திருட்டு பயலே படப்பிடிப்பின் போது தன்னிடம் இரட்டை வசனத்தில் பேசினார் என்றும் காரணம் இல்லாமல் உடலை ஒட்டி உரசும் மனப்பான்மை உடையவர் என்றும் நடிகை அமலா பால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.




