பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் அஞ்ஜலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் ஆனந்த் கிருஷ்ண்மூர்த்தி. தனது ஒன்பது வயதில் பள்ளி நாடகங்களில் நடித்தவர் ஆனந்த். பின்னர், அவருக்கு அஞ்சலி படத்தில் வாய்ப்பளித்தார் மணிரதனம். பின்னர் அதே வருடம் சதி லீலாவதி, ஆசை, தளபதி போன்ற படங்களில் நடித்து வந்த கிருஷ்ணமூர்த்தி அதன் பின் தமிழ் சீரியல்களிலும் 1999 வரை நடித்து வந்தார்.
தற்போது அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா? சென்னை லயோலா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் முடித்தவர், பின்னர் அன்னா யுனிவர்சிட்டியில் எலெக்ட்ரிக் மீடியா கம்யூனிகெசன் முடித்தார். ஃபில்ம் அண்ட் டெலிவிசம் துறையில் மாஸ்டர் டிகிரியும் முடித்துள்ளார் ஆனந்த்.
பின்னர், இயக்குனர் பாலுமகேந்திராவிடம் துணை இயக்குனராக இரண்டு வருடங்கள் பணியாற்றி இருக்கிறார். கமலின் உன்னியப் போல் ஒருவன் படத்தில் டையலாக் எடிட்டராகவும் அதே படத்தில் ஒரு சின்ன ரோலிலும் நடித்துள்ளார்.
பின்னர் கமல்ஹாசனின் இயக்கத்தில் வெளிவந்த ஆரோ 3D ஆடியோ தொழில்நுட்ப படமான விஸ்வரூபம் படத்திலும் சூப்பர்வைசிங் சௌண்ட் எடிட்டராகவும் பணியாற்றினார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஓ காதல் கண்மணி படத்திலும் சௌன்ட் டிசைனர் ஆனந்த கிருஷ்ணன் தான். திரைக்குப் பின்னால் இயங்கிவந்தாலும் நடிப்பை விட்டுவிட மாட்டேன் என ஆணித்தனமாக கூறியுள்ளார் ஆனந்த்.