-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

ஐந்து வயது மகளைப் பறிகொடுத்த தந்தை, மகள் நினைவாக நடத்தும் டிரஸ்ட் – படவா கோபி வாழ்க்கையின் மறுபக்கம்

0
50

பல குழந்தைகளை நடிகர் படவா கோபி- ஹரிதா தம்பதியில தத்தெடுத்து வளர்த்து வரும் தகவல்தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் படவா கோபி. அதோடு இவர் மிகச்சிறந்த மேடை நகைச்சுவை கலைஞரும் ஆவார். இவர் சென்னையை சேர்ந்தவர். இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘பொய்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் படவா கோபி.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் பல குரல் இசைக்கலைஞர், வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் என்ன பன்முகங்களைக் கொண்டு திகழ்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார். தமிழ்நாடு பிரீமியர் லீகில் தொழில்முறை வீரர்களுக்காக பணியாற்றுவதற்கு முன்பு ஆரம்பத்தில் பிரபலங்கள் பங்கு பெறும் கிரிக்கெட் லீக் போட்டிகளில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படவா கோபி திரைப்பயணம்:

இவர் வெள்ளித் திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறார். சமீபத்தில் ஜி. பிரகாஷ் நடிப்பில் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘டியர்’ படத்தில் இவர் நடித்திருந்தார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, காளி வெங்கட், ரோகினி, சித்ரா லக்ஷ்மணன் என பலர் நடித்து இருந்தனர். இப்படத்தை நட்மெக் புரொடக்ஷன் தயாரித்திருந்தது.

படவா கோபி திருமணம்:

-விளம்பரம்-

இதைத் தொடர்ந்து இவர் மேலும் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். படவா கோபி அவர்கள் ஹரிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஹரிதாவும் படங்களில் நடித்தும், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். ஆனால், ஒரு மகள் இறந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது குறித்து படவா கோபி-ஹரிதா பல இடங்களில் கூறியிருக்கிறார்கள்

-விளம்பரம்-

கோபி ஹரிதா மகள் இறப்பு:

அதில், எனக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு குழந்தைகள். 2007 ஜூலை மாதம் ஒரு நாள் நாங்கள் நால்வரும் ஆசிரமத்திற்கு வந்து விட்டுச் சென்றோம். திடீரென ஆகஸ்ட் மாதம் என் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அப்போது அவளுக்கு ஐந்து வயது. அப்போது சத்குருவிடம் தொடர்பிலும் இருந்தோம். ஆனால் மூணு நாட்களில் அவள் இறந்து விட்டாள். ஏன் இப்படி நடந்து என யாருக்கும் தெரியவில்லை என்று கூறியிருந்தார்கள்.

படவா கோபி நடத்தும் டிரஸ்ட்:

இந்நிலையில் நடிகர் படவா கோபி ஹரிதா தம்பதியினரின் ஐந்து வயது மகளான ஆதியா காலமான பின்னர் ‘aadya hug’ என்கிற பெயரில் டிரஸ்ட் ஒன்று ஆரம்பித்து இருக்கிறார்கள். இன்று வரை அந்த டிரஸ்ட் மூலமாக 260 குழந்தைகளை தத்து எடுத்து வளர்த்து வருகிறார்கள். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் மீண்டும் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் படவா கோபி – ஹரிதா தம்பதியினரை பாராட்டியும் வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news