கடந்த சில நாட்களாக “சர்கார்” படத்தின் கதை திருட்டு விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. உதவி இயக்குனர் வருண் என்பவர் அளித்த புகாரின் பேரில் தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவரான நடிகர் பாக்கியராஜ் போராடி முருகதாஸ் கதை திருட்டு செய்தார் என்று நிரூபித்தார்.
இந்த விவகாரத்தில் நடிகர் பாக்கியராஜ் மீது பல்வேறு விமர்சனங்களும் எழுத்தந்து. பாக்கியராஜ் சர்கார் படத்தின் முழு கதையையும் வெளியிட்டு விட்டார் என்று படகுழுவும் அவர் மீது கடுப்பில் இருந்து வந்த நிலையில் தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பாக்கியராஜ் திடுக்கிடும் அறிக்கையை வெளியிட்டுள்ளர்.
சமீபத்தில் பத்திரிகையாளர்களை அழைத்து பிரஸ் மீட் வைத்த நடிகர் பாக்கியராஜ் கூறியதாவது, சர்கார் படத்தின் கதையை நான் வெளியிட்டதற்காக சன் பிக்சர்ஸ்ஸிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதற்கு மேல் சர்கார் படத்தின் எந்த ஒரு பிரச்சனையிலும் நான் தொடரவிரும்பவில்லை.
மேலும், இந்த விவாகரத்தில் நான் பல உள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் நான் எழுத்தாளர் சங்க தலைவர் பதிவியிலிருந்து விலகுகிறேன். விரைவில் எழுத்தாளர் சங்கத்தில் மறு தேர்தல் நடத்தபட்டு பெருவாரியான ஆதரவுடன் நான் மீண்டும் பதவியில் வருவேன் என்று தெரிவித்துள்ளார்.