இந்த 3 பொம்பள பிள்ளைங்க இருக்கு பாருங்க..! போட்டியாளர்களை அசிங்கப்படுத்திய கஞ்சா கருப்பு

0
1286
ganja-karuppu
- Advertisement -

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் பல்வேறு வித்யாசங்கள் இருக்கின்றனர். சீசன் 1-ஐ விட பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மக்களின் அபிமானத்தை பெறவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

-விளம்பரம்-

- Advertisement -

பிக் பாஸ் 2 போட்டியாளர்களை வறுத்தெடுத்த கஞ்சா கருப்பு

பிக் பாஸ் 2 போட்டியாளர்களை வறுத்தெடுத்த கஞ்சா கருப்பு #biggbosstamil2 #Ganjakaruppu

Posted by Cinemavikatan on Saturday, September 15, 2018

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் இந்நிகழ்ச்சி குறித்து நடிகரும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான கஞ்சா கருப்பு கடுமையான பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

சமீபத்தில் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள நடிகர் கஞ்சா கருப்பிவிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

அதில் தற்போது இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரை பார்த்தால் கோவம் வருகிறது என்று கேட்டோம்.

அதற்கு கஞ்சா கருப்பு: இப்போ இருக்கிற நிகழ்ச்சியில் 3 பொம்பள புள்ளைங்கள பார்த்தா தான் கோவம் வருது(யாஷிகா, ஐஸ்வர்யாவை தான் குறிப்பிடுகிறார்)அறையும் குறையுமா டிரஸ் பண்ணிக்கிட்டு கமல் சார் முன்னாடி கால் மேல் கால் போட்டு ஒக்கறாங்க. எனக்கெல்லாம் அந்த பழக்கமே வராது. அவர் எவ்வளவு பெரிய உலக நாயகன் நாங்கெள்ளாம் அவர் முன்னாடி கும்பிட்டு தான் நிற்பேன் என்று பதிலளித்துள்ளார்.

yashika

இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார் என்று கேட்டதற்கு:

மும்தாஜ் தான் வெற்றி பெறுவார் நான் அவருக்கு தான் ஒட்டு போட்டுளேன் என்று கூறியுள்ளார்(பாவம் அண்னே நீங்க ஒட்டு போட்டும் அவர இந்த வாரம் வெளியே அனுப்பிட்டாங்க) . மேலும், முதல் சீனில் நீங்க அனைவருமே உண்மையாக இருந்தீங்க ஆனா இப்போ இருக்கறவங்க யாரும் உண்மையாக இல்லை என்று கேட்கப்பட்ட போது, அதை தான் கமல் சாரே சொல்லிட்டாரே என்று கூறியுள்ளார்.

mumtaj

மேலும், சீசன் 2 நிகழ்ச்சிக்கு உங்களை கெஸ்ட்டாக அழைத்தார்களா என்று கேட்டதற்கு:

என்னை கூப்பிட்டாங்க நான் போகல நல்லவங்க இருந்தா போகலாம் ஆனால், உள்ள இருக்கிறது எல்லாம் ஏழரை நாட்டு சனியன்களாக இருக்கிறது.நாம எங்க போறது என்று மிகவும் காட்டமாக பதிலளித்துள்ளார். கமல் சார் தான் இருகாரே அவர் நல்லவர் தானே அப்போ நீங்க போகலாமே என்று கேட்கப்பட்ட போது, அவர் நல்லவர் தான் அவர் வெளியே தானே இருக்கிறார்.அவர் ஒரு நாளைக்கு உள்ளே இருந்து பார்க்கட்டும் இந்த சனியங்களோடு இருந்தாருன்னா ஓடியே போய்டுவாரு என்று கஞ்சா கருப்பு பதிலளித்துள்ளார்.

Advertisement