இந்தியா முழுவதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைகளும், கலவரங்களும் தான். அதற்கு எப்போதும் பஞ்சம் கிடையாது. அதில் பங்கு கொள்ளும் போட்டியாளர்களும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்புவது வழக்கமான ஒன்றாகி விட்டது. அந்தவகையில் ஹிந்தியில் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்ட நடிகர் அர்ஹான் கானின் முன்னாள் காதலி விபச்சார வழக்கில் சிக்கி கைதாகி இருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாலிவுட்டில் பிரபலமான நடிகர் அர்ஹான் கான் . இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் மாடலும் ஆவார். நடிகர் அர்ஹான் கான் அவர்கள் இந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 13ல் கலந்து கொண்டார். அதோடு 2017 ஆம் ஆண்டு ரஷ்மி தேசாய்கும், அர்ஹான் கானுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இதனை தொடர்ந்து இவர்களுடைய நட்பு காதலாக மாறி உள்ளது என்ற தகவலும் இணையங்களில் பரவியது. பின் இவர்கள் இருவரும் சேர்ந்து டேட்டிங் செய்து உள்ளார்கள். இதனால் இவருடைய ரசிகர்கள் எல்லோரும் இவர்களை மேட் பார் ஈச் அதர் என்றும் கூறி வந்தார்கள். ஒரு சில பேர் இரண்டு வயது இளையவர் உடன் டேட் செய்வதா? என்றும் பல விமர்சனங்களை எழுப்பி வருகின்றன.
இதையும் பாருங்க : காஜல் அகர்வாலுக்கு போட்டியாக கடற்கரையில் பிகினி உ டையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ரகுல் ப்ரீத் சிங்.
பின் இவர்களுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அதற்குப் பிறகு தான் நடிகர் அர்ஹான் கான் வாழ்க்கையில் வந்தவர் தான் அம்ரிதா தான்னோ. இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள். ஆனால், திடீரென்று நடிகை அம்ரிதா தான்னோ என்னிடமிருந்து நடிகர் அர்ஹான் கான் 5 லட்சம் ரூபாய் ஏமாற்றி விட்டதாகவும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார். அதுமட்டும் இல்லாமல் இதை போலீசாரிடம் புகார் செய்து அவரை சிறையில் தள்ள போவதாகவும் தெரிவித்து இருந்தார். ஆனால், இந்நிலையில் இவர் மும்பையில் விபச்சாரம் செய்ததாக போலீசில் கைதாகி உள்ளார். தற்போது இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திரை நட்சத்திரங்கள் எல்லாம் கலந்து கொண்டு இரவு விருந்துகளில் கலந்து கொள்வார்கள். இந்த இரவு விருந்தை நட்சத்திர ஓட்டல்களில் நடத்தி உள்ளார்கள். மேலும், இதில் விருந்துகள் மட்டும் இல்லாமல் பல்வேறு தவறான விஷயங்கலும் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்து உள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சோதனை நடத்தி உள்ளார். அப்போது அந்த நட்சத்திர ஓட்டலில் நடிகை அம்ரிதா தான்னோ அவர்கள் உள்ளாடையோடு தப்பிக்க முயற்சி செய்து உள்ளார். பின் அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து உள்ளனர். மேலும், இவருடன் நடிகை ரிச்சா சிங் என்பவரும் கைது ஆகி உள்ளார். இந்த சோதனையில் இரண்டு நடிகைகள் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.