தன்னுடைய முதல் மனைவி கொடுத்த பொய் குற்றச்சாட்டுக்கு நடிகர் சரவணன் கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் சரவணன். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்து இருந்த பருத்தி வீரன் என்ற படத்தில் சித்தப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மீண்டும் தனெக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார்.

தற்போது இவர் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சரவணனன் அவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்திருக்கிறார். அதில் அவர், நான் கடந்த 2014 ஆம் ஆண்டு போரூர் மவுலிவாக்கத்தில் செண்பகராமன் என்பவரிடமிருந்து லேக் வியூ அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு வீடுகள் வாங்கி இருந்தேன். அதில் எனக்கு சொந்தமாக இரண்டு வீடுகளுக்கும் சேர்த்து கார் பார்க்கிங் மற்றும் யூ டி எஸ் இடம் 700 முதல் 800 சதுர அடி வரை இருந்தது. இந்த கார் பார்க்கிங் மற்றும் யூ டி எஸ் இடம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை ராமமூர்த்தி என்பவர் வாங்கிக் கொடுத்தார். அதற்கு பின் நான் கொரோனாவிற்காக ஊருக்கு போவதும், வருவதுமாக இருந்தேன்.

Advertisement

சரவணன் அளித்த புகார்:

அதோடு என்னுடைய முதல் மனைவிக்கு குழந்தை இல்லை என்பதால் நான் 2015 ஆம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். இரண்டாவது திருமணம் செய்த பிறகு முதல் மனைவியுடன் எனக்கு வாக்குவாதம் ஏற்பட்டு அவரை விட்டு நான் வந்து விட்டேன். இதன் காரணமாக நான் அந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்கு செல்லாமல் இருந்தேன். இதை பயன்படுத்தி கொண்ட ராமமூர்த்தி கார் பார்க்கிங் இடத்தில் கடையை கட்டிக்கொண்டு மின் இணைப்பையும் வாங்கி வரி கட்டி விட்டதாக சொல்கிறார். என்னுடைய கார் பார்க்கிங், யூ டி எஸ் இடத்தை அவருடையதாக கூறி ஏமாற்றுகிறார். அந்த இடத்தை மீட்டு வாங்கித் தர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

முதல் மனைவி சூர்யா ஸ்ரீ அளித்த புகார்:

இதனை அடுத்து நடிகர் சரவணனின் முதல் மனைவி சூர்யா ஸ்ரீ அவர்கள் சரவணன் தன்னை அடியாள் வைத்து மிரட்டுவதாக புகார் அளித்திருக்கிறார். பின் இது குறித்து போலீசார் விசாரித்த போது நடிகர் சரவணன் சென்னை குன்றத்தூர் பகுதியில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வருகிறார். அந்த அப்பார்ட்மெண்டில் சரவணனுக்கு இரண்டு வீடுகள் இருக்கிறது. ஒன்றில் அவருடைய முதல் மனைவியும், இன்னொன்றில் சரவணன் தனது இரண்டாவது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். முதல் மனைவிக்கு குழந்தை இல்லாததால் தான் நடிகர் சரவணன் சூர்யா ஸ்ரீதேவி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

சரவணன் இடம் குறித்த சர்ச்சை:

இது அவருடைய முதல் மனைவியின் சம்மதத்துடன் சில வருடங்களுக்கு முன் நடந்தது. இதை சரவணனும் பேட்டியில் கூறியிருக்கிறார். தற்போது குன்றத்தூர் பிளாட்டை வாங்கிய போது இவருடைய முதல் மனைவியும் சில லட்சங்கள் கொடுத்ததாகவும், இந்த வீட்டை சரவணன் தன்னுடைய பெயரில் மாற்றிக் கொண்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து சரவணன் கூறியது, கடை கட்டிருக்கும் இடம் என்னுடைய கார் பார்க்கிங் தான். மோசடி பத்திர தயார் செய்து இந்த இடத்தில் கடையை கட்டி இருக்கிறார்கள். கடையை இன்னும் திறக்கவில்லை. அதை திறக்கவும் விடமாட்டேன்.

Advertisement

முதல் மனைவி குறித்து சொன்னது:

சட்டப்படி நடவடிக்கை எடுத்து அந்த கடையை இடிக்காமல் விடமாட்டேன். என்னுடைய முதல் மனைவியின் சம்பந்தத்துடன் தான் இரண்டாவது திருமணமும் செய்து இருக்கிறேன். இதை பத்திரிகைகளிலும் கூறி இருக்கிறேன். ஆனால், இன்று நான் தாலி கட்டாமல் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறார். அதனால் அவர்களை என்னுடைய முதல் மனைவின்னு கூட என்னால் இப்ப சொல்ல முடியவில்லை. என்னை பொறுத்தவரை என்னுடைய முதல் மனைவி செத்துவிட்டால் என்று நினைக்கிறேன். இந்த விஷயத்தில் கூடிய சீக்கிரமே எனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement