அபிராமி பாலாவுக்கு இடையில் இதான் நடக்குது, புட்டு புட்டு வைத்த வனிதா – இவர் சொன்னா சரியா தான் இருக்கும்.

0
471
vanitha
- Advertisement -

மேலும், கடந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து கமலஹாசன் பட சூட்டிங் நேரம் ஒதுக்க முடியாத காரணத்தினால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இது குறித்து கமல்ஹாசன் அறிக்கை கூட வெளியிட்டிருந்தார். இதனால் ரசிகர்களும் போட்டியாளர்களும் பெரும் அப்சட் அடைந்து உள்ளனர். அதோடு கமல் வெளியேறியதை தொடர்ந்து வனிதாவும் தான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று கூறி நான் நிகழ்ச்சிக்கு வந்ததே கமலஹாசனுக்காக தான். அவர் எது சொன்னாலும் நான் கேட்டுகொள்வேன். அவர் இடத்தில் வேறு யார் வந்து சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றெல்லாம் பேசி இருந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is vanitha-12.jpg

பின் வனிதா பிக் பாஸ் வீட்டை விட்டு தாமாகவே வெளியேறினார். இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு வனிதா பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, எல்லோரும் நான் வெளியே வந்ததை சரி என்று தான் சொல்கிறார்கள். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கேம் தப்பான டிராக்கில் போய்க்கொண்டிருக்கிறது. என்னை யாரும் ஏன் இப்படி செய்தாய் என்று சொல்லவில்லை. நீ செய்தது சரி தான் என்று என்னை பாராட்டினார்கள். என்னுடைய நண்பர்கள், என்னுடன் நெருக்கமாக உள்ளவர்கள் என எல்லோருமே அதை தான் சொன்னார்கள்.

- Advertisement -

பொதுவாகவே எனக்கு சண்டை போடுவது பிடிக்காது. அதனால் தான் நான் பிரச்சனைகள் அதிகமாகும் அந்த இடத்தை விட்டு வெளியேறி விடுவேன். என்றும் கூறி இருந்தார். வனிதா வெளியேறியதில் இருந்தே நிகழ்ச்சியில் பெரிதாக சுவாரசியம் இல்லை. இருப்பினும் கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக ஆகி இருப்பது பாலாஜி மற்றும் அபிராமி பற்றிய கிசுகிசுக்கள் தான்.

கிசுகிசுவில் சிக்கிய பாலாஜி – அபிராமி :

இந்த சீசனில் பங்கேற்றுள்ள அபிராமி – நிரூப் ஆகிய இருவரும் ஏற்கனவே காதலித்து பிரேக்கப் ஆனவர்கள் தான். ஆனால், தற்போது பிக் பாஸ் வீட்டில் பாலாஜி, அபிராமி தொடர்ந்து நெருக்கம் காட்டி வருவது நிரூப்பால் ஜீரணித்துகொள்ளமுடியவில்லை. இப்படி ஒரு நிலையில் பாலாஜி மற்றும் அபிராமி இருவரும் ஸ்மோக்கிங் ரூமில் படு நெருக்கமாக இருந்ததாகவும் அதனை ஒளிபரப்பவில்லை என்றும் சமூக வலைதளத்தில் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அபி பாலா இருவருக்கும் என்ன நடக்கிறது என்று கேட்டு இருந்தனர். அதற்கு பதில் கொடுத்த வனிதா.

-விளம்பரம்-

அபிராமி – பாலாஜி குறித்து வனிதா :

அதே போல பாலாஜி – அபிராமி இடையில் எதோ சென்று கொண்டு இருக்கிறது. அபிராமியை பாலாஜி பயன்படுத்தி கொள்கிறேன் என்று முதலில் கொளுத்தி போட்டதே வனிதா தான். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளும் வனிதா பதில் அளித்து கொண்டு இருந்தார். அப்போது ரசிகர்கள் சிலர் உங்களை ஏமாற்றமடைய செய்வதர்க்கு மன்னியுங்கள். ஆனால், அவர்கள் இருவருக்கும் உண்மையான காதல் இல்லை என்று பதில் அளித்துள்ளார்.

ரசிகர்களை குழப்பிவிட்ட வனிதாவின் Emoji :

வனிதாவின் இந்த பதிலை கேட்ட ரசிகர் ஒருவர், உண்மை காதல் இல்லை என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டதற்கு நாய் மற்றும் heart புகைப்படத்தை பதிவிட்டு வேறு என்ன சொல்வது என்று பதிவிட்டுள்ளார். இதை பப்பி லவ் என்று சில ரசிகர்கள் எடுத்துக்கொண்டாலும் ஒரு சிலர் வனிதா, அதை நாய் காதல் என்று குறிப்பிட்டுள்ளார் என்று கூறி வருகின்றனர்.

Advertisement