விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் பல்வேறு சர்ச்சையான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதில் மிகவும் முக்கியமான ஒருவராக திகழ்ந்து வந்தவர்தான் நடிகை வனிதா கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி களில் எந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான் ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று உள்ளது அதற்கு முக்கிய காரணமே இந்த சீசனில் நடந்தேறிய பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் தான் அதற்கு முழு முதல் காரணமாக இருந்து வந்தார் நடிகை வனிதா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மூத்த மகள் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம்தான்.

பிக் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாகவே ரசிகர்கள் மத்தியில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு நபராக தான் இருந்து வந்தார் வனிதா. இதற்கு முக்கிய காரணமே இவர்களது குடும்பத்தில் நடந்த பிரச்சினைதான். வனிதா கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் நடித்தார். பின் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். திருமணத்துக்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் தனித்தனியாக வசித்து வருகிறார் வனிதா.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். மேலும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றியும் நடிகர்களை பற்றியும் யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து வருகிறார். அதோடு வடிவமைப்பாளராகவும் அசத்தி வருகிறார்.

Advertisement

இந்த நிலையில் வனிதா தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பிரபலமான ஒரு நடிகையின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை விமலா ராமன் தன்னுடைய உறவினர் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ள விமலா தன்னுடைய அம்மாவழி உறவினர் என்றும். இருவருமே நீதிபதி முத்துசாமி ஐயரின் பேத்திகள் என்றும் இது தனக்கு 40 வருடங்கள் கழுத்துதான் தெரியவந்துள்ளது என்று வினிதா தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த பதிவை பகிர்ந்த பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Advertisement