கடந்த சில நாட்களாகவே வனிதாவின் மூன்றாம் திருமணம் பற்றிய செய்திதான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் அனிதாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி அது இரண்டும் விவாகரத்தில் முடிந்து விட்டது. வனிதாவிற்கு ஏற்கனவே ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் தனியாக வாழ்ந்து வந்த வனிதா, சமீபத்தில் பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.
ஆனால், இது முறைப்படி திருமணம் இல்லை காதலின் கொண்டாட்டமா என்பதை தெளிவாக கூறாமல் வனிதா ரசிகர்களை குழப்பி கொண்டுதான் வருகிறார். அதற்கு காரணம் பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. வனிதா பீட்டர் பவுலை திருமணம் செய்வதற்கு முன்பாக, அதாவது சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டரை காதலித்து வந்தார்.
இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்கள் காரணம் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. இந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர் வனிதாவின் மூன்றாவது திருமண செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும், மேலும் வனிதாவை திட்டியதாகவும் வீடியோ ஒன்று வெளியானது. ஆனால் இப்படி ஒரு பேட்டியை நான் எந்த ஊடகத்திற்கும் அளிக்கவில்லை என்றும் வனிதாவின் திருமணம் குறித்து தான் எந்தவித கருத்தையும் சொல்லவில்லை என்றும் ராபர்ட் மாஸ்டர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராபர்ட் மாஸ்டர், வனிதாவிற்கும் பீட்டருக்கும் அறிவுரை கூறியுள்ளார். அதில், வனிதாவுக்கு அறிவுறை கூறிய ராபர்ட், வனிதா உணமையில் சிங்கப்பெண் என்றால் அவர் பீட்டரிடம், போய் உன் குடும்பத்தை பார் என்று சொல்ல வேண்டும். மேலும், பீட்டர் பாலுக்கு நான் சொல்லும் அட்வைஸ் என்னவென்றால் உண்மையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். மேலும், குக்கு வித் கோமாளியில் வனிதாவை பார்ததும் பரவா இல்லை வனிதா மாறிடிச்சினு நெனச்சேன். ஆனால், இதை எல்லாம் பார்க்கும் போது.