தமிழ் திரைப்பட உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இளைசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் ஒரு பஞ்சாப் மாடல் அழகி ஆவார். இவர் துருவங்கள் பதினாறு என்ற தமிழ் படத்தின் மூலம் தான் சினிமா துறையில் அறிமுகமானார். பின்னர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய அளவில் பிரபலமானர்.

அதோடு இவர் நடித்த படங்கள் எல்லாமே ஹாட்டான கவர்ச்சியான கதாபாத்திரங்கள் தான். பின் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பட்டத்தை வெல்லவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இளம் ரசிகர்களை கவர்ந்தார். அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் கவர்ச்சி தான்.

Advertisement

யாஷிகா ஆனந்த்துக்கு ஏற்பட்ட விபத்து:

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் உருவாகியது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் இவர் ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு சென்னை, மாமல்லபுரம் அருகே நடந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருந்தார். விபத்திற்குப் பின்னர் யாஷிகாவால் சரியாக நடக்க முடிய வில்லை.

படங்களில் கவனம் செலுத்தும் யாஷிகா ஆனந்த்:

இதனால் அவர் நடித்து வந்த படங்கள் மற்றும் பங்கேற்ற நிகழ்ச்சிகள் அனைத்திலிருந்தும் தற்காலிகமாக விலகி இருந்தார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூட இவருக்கு கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், தான் முன்பைப் போல டாஸ்க்குகளை செய்ய முடியாது என்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டாராம். தற்போது விபத்தில் இருந்து தேறி வந்துள்ள யாஷிகா மீண்டும் படங்களில் நடிக்க துவங்கி இருக்கிறார்.

Advertisement

ரசிகர்கள் செய்த செயல் :

யாஷிகாவின் நடிப்பிற்கு இருக்கும் ரசிகர்களை விட இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு இருக்கும் ரசிகர்கள் தான் அதிகம் இதனால் இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட Fan பேஜ் இருக்கிறது. அந்த வகையில் Devotees Of Yashika என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்று இருக்கிறது. இந்த பக்கத்தை கிட்டத்தட்ட 1000 பேர் பின் தொடர்ந்து இருக்கிறார்கள். மேலும் இந்த பக்கத்தில் யாஷிகாவின் புகைப்படங்கள் அடிக்கடி பதிவிட பட்டு வருகிறது.

யாஷிகா கொடுத்த அட்வைஸ் :

இப்படி ஒரு நிலையில் ரசிகர்கள் சிலர் யாஷிகாவை கடவுளாக வணங்குவது போல சில புகைப்படங்கள் இந்த பக்கத்தில் பதிவிட பட்டு இருந்தது. இதற்கெல்லாம் மேலாக யாஷிகாவின் வெறித்தனமான ரசிகர் ஒருவர் யாஷிகாவிற்கு கையில் கற்பூரத்தை காட்டி இருக்கும் வீடியோ ஒன்றும் பதிவிடப்பட்டிருக்கிறது. இந்த பதிவினை தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்திருக்கும் யாஷிகா நானும் உங்களைப் போன்ற ஒரு சாதாரண மனிதர் தான். அன்பை மட்டும் பரப்புவோம், நமக்கெல்லாம் மேலே இருக்கும் கடவுளை மட்டும் வணங்குவோம்’ என்று அறிவுரை கூறியிருக்கிறார்.

Advertisement