காவேரி நீர் பிரச்சனை : தொடர்ந்து மௌனம் காக்கும் தமிழக நடிகர்கள். இது தான் காரணமா?

By S.Dhilip Kumar · 30/9/2023

இந்திய பாகிஸ்தான் பிரச்சினை போல தற்போது தமிழகமும் கர்நாடகமும் இருந்து வருகிறது. காவிரி நதிநீர் தமிழகத்திற்கு அளிப்பதற்கு கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது அது மட்டுமல்லாமல் இங்கிருந்து கர்நாடகா பெங்களூர் செல்லும் தமிழக வாகனங்களையும் ஓட்டுனர்களையும் தாக்கி வருகிறது. இமேலும் தமிழகத்திற்கு எதிராக அங்கு ஒரு போராட்டத்தையும் கன்னட அமைப்புகள் நடத்தி வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் சித்தா படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாதியில் வந்த கன்னட அமைப்புகள் தமிழ் நடிகர் எப்படி சந்திக்கலாம் என்றும் அவரை மிரட்டி வெளியே அனுப்பினார். அதற்கு கர்நாடகத்தின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் சிவராஜ் குமார் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் மன்னிப்பு கூறினார். கர்நாடகாவில் சித்தார்த் வெளியேற்றியது பற்றி இங்கு உள்ள தமிழகத்தில் உள்ள நடிகர் சங்கமம் அல்லது தயாரிப்பாளர்கள் சங்கமும் கண்டனம் அறிக்கை கூட வெளியிடவில்லை.

நடிகர் ரஜினிகாந்த் சந்திரமுகி இரண்டாம் பாகத்திற்கு ஒரு அறிக்கையை விட்டார் கூட ஆனாலும் இது இந்த சித்தா படத்தின் தொடர்பாக அவர் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. காவிரி நதிநீர் விவகாரத்தில் ரஜினிகாந்த் தமிழகத்திற்கு ஆதரவாக பேசக்கூடாது என்றும் கர்நாடகவிற்கு தான் ஆதரவாக பேச வேண்டும் என்றும் அன்புள்ள கனடா அமைப்புகள் ரஜினிகாந்துக்கு மிரட்டல்களை அளித்து வருகிறது. சினிமாவில் மட்டுமே விவசாயம் காப்போம் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசி வரும் நடிகர்களை குறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை.

இவர்களுடைய வீரம் எல்லாம் அனைத்தும் சினிமாவில் மட்டுமே என்றும் பலர் இவர்களை விமர்சித்து வருகின்றனர். அவ்வாறு கர்நாடகாவிற்கு எதிராக குரல் கொடுத்தால் அவர்கள் திரைப்படத்தை அங்கு கர்நாடகாவில் வெளியிட முடியாது என்று இங்கு உள்ள தமிழக நடிகர்கள் மௌனம் காத்து அறிகின்றனர். சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் கர்நாடகாவில் மட்டுமே 75 கோடி வசூலித்து வந்தது எனது மற்ற நடிகர்களின் படம் கர்நாடகாவில் அதிக அளவில் ஓடும் என்பதால் கர்நாடகாவிற்கு எதிராக யாரும் அறிக்கையையும் வாயையும் திறக்கவில்லை.

கர்நாடக தமிழகத்தை தாண்டி கர்நாடகாவில் தான் தமிழ் படங்கள் அதிக அளவில் ஓடுகின்றன. அடுத்த மாதம் வெளியாகியுள்ள லியோ படம் ஜெயிலர் படத்தின் முஸ்லிம் உரியடித்து 100 கோடி அங்கு கர்நாடகாவில் மட்டும் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவே இங்குள்ள தமிழக நடிகர்கள் யாவரும் வாய் திறந்து பேச மாட்டார்கள் என்றும் கருத்துக்கள் இருந்து வருகிறது. தமிழக ஓட்டுனர்கள் அங்கு தாக்கபடுவது குறித்தும் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் தாக்கப்பட்டது குறித்து தாக்கியவர்கள் மீதும் அங்குள்ள கர்நாடக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full