நடிகர் கருணாஸ் தன்னுடைய இயல்பான கிராமத்து நடையில் பேசும் காமெடியால் தமிழ் சினிமாவில் பிரபலம் ஆனவர். இவர் முதலில் காமெடியனாக நடிக்கவில்லை. தஞ்சாவூர் திருவாடனையில் இருந்து சென்னை வந்த கருணாஸ் நந்தனம் கல்லூரியில் டிகிரி படித்துள்ளார்.
அங்கு படிக்கும் போது நாட்டுப்புற பாடல்களின் மீது ஆர்வமாக இருந்து அதனை கற்றுக்கொண்டார். பின்னர் சினிமாவில் சில பாடல்களும் பாடினார். ஒரு கல்லூரியின் விழாவில் பாடல் பாட சென்றிருந்த போது, கிரேஸ் என்னும் இன்னொரு நாட்டுப்புற பாடகியுடன் நட்பு ஏற்பட்டது.
பின்னர் அந்த நட்பு காதலாக மாறி திருமணம் செய்துகொண்டனர். கிரேஸ் தற்போது விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஜட்ஜாக இருந்து வருகிறார்.
இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவருடைய மகள் செல்வி டிகிரி முடித்துள்ளார். செல்வி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒரு சர்ச்சையில் மாட்டினார்.
அதிமுக பிரமுகர் ஒருவரிடம் சொத்துக்ளை முறைகேடு செய்து வாங்கியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு கேஸ் போடப்பட்டது. பின்னர் , 2016ஆம் ஆண்டு செல்வி குற்றமற்றவர் என தீர்ப்பு வந்தது. தற்போது செல்வி தனது அப்பாவின் முக்குலத்தோர் புலிப்படையில் ஒரு முக்கிய நிர்வாகியாக இருந்து வருகிறார்.