பட்டனுக்கு பதிலா பின்னு, ஊக்கு போட்ட செருப்புனு இருந்தப்ப, என் தோள்ல கையைப்போட்டு என் இயக்குனர்னு சொன்னவரு அஜித். இயக்குனர் பேட்டி.

0
2017
ajithad
- Advertisement -

தமிழ் சினிமாவில் தல என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அல்டிமேட் ஸ்டார் அஜித். உழைப்பாளர் தினமான இன்று தமிழ் சினிமாவில் உழைப்பிற்கு அடையாளமாக இருக்கும் அஜித்தி இடையில் தொடர்ந்து தோல்வி படங்களாக நடித்து வந்தார். ஆனால், அஜித்துக்கு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது வாலி திரைப்படம் தான்.

-விளம்பரம்-
.

என் சட்டை'ல பட்டன் இருக்காது செருப்பு'ல பின் குத்திருப்பேன் அப்படி இருக்கும் போது என் தோல் மேல கை போட்டு இவர் என் டைரக்டர்'னு #அஜித் சார் சொல்லுவார் இந்த எண்ணம் தான்.."#SJSuryah

Record Killer Thala Fans-Madurai ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಬುಧವಾರ, ಮೇ 27, 2020

தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து பின்னர் ஹீரோவான பல இயக்குனர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல இயக்குனரான எஸ் ஜே சூர்யாவும் ஒருவர். எஸ் ஜே தமிழில் பல்வேறு ஹிட் படங்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார். அதிலும் இவர் இயக்கிய குஷி மற்றும் வாலி திரைப்படங்கள் வேற லெவலில் வெற்றிபெற்றது.

- Advertisement -

இந்த படத்தின் போது அஜித், எஸ் ஜே சூர்யாவிற்கு பைக், கார் கூட பரிசாக வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எஸ் ஜே சூர்யா அளித்த பழைய பேட்டியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த பேட்டியில் எஸ் ஜே சூர்யாவிடம் சினிமாவில் நீங்கள் யாரை மறக்க மாடீர்கள் என்று கேள்வி கேட்டிருந்தார் சுஹாசினி.

vaali

என் வாழ்க்கையில் என்னுடைய அப்பா, அம்மாவிற்கு பின்னர் மறக்க முடியாத நபர் என்றால் அஜித் தான். இன்னிக்கி நான் ஒரு நல்ல சட்டை, பேண்ட் போட்டு ஒக்காந்து இருகேன். ஆனால், அன்னிக்கி என் சட்டைல பட்டன் இருக்காது, காலில் பாரகான் செருப்பு, போட்டு இருப்பேன். ஆனால், அப்போதே என் தோளில் கை போட்டு என் டைரக்டர் என்று சொன்னவர் அஜித் என்று கூறியுள்ளார் எஸ் ஜே சூர்யா.

-விளம்பரம்-
Advertisement