கடந்த ஏப்ரல் மாதம் 28ஆன் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் கல்லா கட்டியது பாகுபலி-2 திரைப்படம். இந்த படத்தில் பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், நாஸர், சுதீப், தம்மனா, அனுஸ்கா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்தது.
இவர்களால் படமும் மிகப் பிரம்மாண்டமாக திரையில் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் படத்தில் இவர்கள் மட்டும் நடிக்கவில்லை, அட்மாஸ்பியரில் பலர் நடிக்க வைக்கப்பட்டிருந்தார்கல் அல்லவா? அவர்கள் எல்லாம் யார் வாரிசுகள் தெரியுமா?
இயக்குனர் ராஜமௌலியின் மகள் மயூகா, காஸ்டியூம் டிசைனர் பிரசந்தியின் மகள் அனன்யா, இசையமைப்பாளர் கீரவாணியின் மகள் குமுதவதி ஆகியோர் சூப்பர் ஹிட் பாடலான ‘பலே பலே பலே பாகுபலி பாடலில் பூவினை தூவ நடிக்க வைக்கப்பட்டிருப்பார்கள்.
அதேபோல், அவர்களுக்கு முன்னர் குழந்தைகள் நிற்பார்கள் அவர்களில் இருவர், ஒளிப்பதிவாளர்கள் செந்தில் குமரனின் குழந்தைகள் ஆவர்.