மாரிமுத்து மறைவு குறித்து அவருடன் நடித்த ஆதிரை மனம் உருகி பதிவு ஒன்றை பதிவு செய்து இருந்தார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் மாரிமுத்து. இந்தம்மா ஏய் என்ற டிரேட் மார்க்கிற்குச் சொந்தக்காரர் மாரிமுத்து. இவர் தேனி மாவட்டம் பசுமலை பகுதியை சேர்ந்தவர். இவர் சீரியலில் நடிப்பதற்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து விடம் உதவியாளராக பணியாற்றி இருந்தார்.

அது மட்டும் இல்லாமல் இவர் இயக்குனர்கள் ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே சூர்யா போன்ற பல இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். தமிழில் இவர் “கண்ணும் கண்ணும்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதற்குப் பிறகு இவர் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த ஜெயிலர் படத்தில் மாரிமுத்து நடித்திருந்தார்.

Advertisement

மாரிமுத்து திரைப்பயணம்:

ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து ரசிகர்கள் முதலில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை எடுத்து கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருக்கிறார். இந்த படத்தை சங்கர் இயக்கி வருகிறார். இதனை அடுத்து இவர் நடிப்பில் பல படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் தற்போது சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படத்திலும் மாரிமுத்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மறைந்த நடிகர் மாரிமுத்து அவர்கள் மனதில் பட்டதை கொஞ்சம் தயக்கமும் பயமும் என்று வெளிப்படையாக பேசி வருவார். அவருடைய இழப்பானது சினிமா உலகத்திற்கு பெயர் இழப்புதான். அவருடன் வைக்கப்பட்டு இருந்த இடத்தில் அவர் அவர் நடித்து வந்த எதிர்நீச்சல் சீரியலில் சேர்ந்த பலரும் அவரது உடலை கட்டியணைத்து எழுதுவார் இருந்தனர்.  எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை கடக்கதா பாத்திரத்தில் நடித்து வரும் சத்யா தேவராஜா நடிகர் மாரிமுத்து மறைவிற்கு இன்ஸ்டாகிராம் வருத்தமாக ஒரு பதிவை ஒன்று செய்திருந்தார்.

Advertisement

அவரை பற்றி ஆதிரை கூறியது:

அதில் அவர்  யாராவது வந்து என்னை எழுப்பி இது ஒரு கனவு  என்று சொல்ல மாட்டார்களா என்று எதிர்பார்த்து காத்துக்  கொண்டிருக்கிறேன். அண்ணே ஏன் இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டுவிட்டு போனீங்க. ஆதிரை தங்கம் தங்கச்சின்னு ஒரு நாளுக்கு முன்னாடி கூட போன்ல பேசியது எல்லாம் கூட இன்னும் காதலை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

Advertisement

இந்த மாதம் முழுவதும் நீங்க செட்டில் இருப்பேன் சொன்னீங்களே ஆனா எப்படி விட்டுவிட்டு போவீங்க என்கிட்ட சொல்லல ஏன் என்ன அவசரம அப்படி. ஆசையா கட்டுர வீட்டுல ஒரு நாள் கூட தங்காம வாழ்க்கையை முறித்துக் கொண்டது நியாயமா. கடைசியா உங்களை எப்பவும் கூப்பிடுற மாதிரி  “எயப்பா ஏய்” நிஜமா உங்களை ரொம்ப மிஸ் பண்ணுறேன் இதயத்தில் இருந்து உங்களை யாராலும் மாற்றி அமைக்க முடியாது என குறிப்பிட்டு இருந்தார்.

Advertisement