Updated · 27 மே, 2026 அன்று 12:03 AM1 நிமிட வாசிப்பு
Lawrance Build House For Old Lady Who Lost Home In Gaja Cyclone — behindtalkies
கஜா புயல், கடந்த 15-ம் தேதி நள்ளிரவு அதிராம்பட்டினத்தில் கரையைக் கடந்தது. எட்டு மாவட்டங்களில் கடும் சேதத்தை இந்தப் புயல் ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. கஜா புயல் கரையைக் கடந்து 6 நாள்களாகியும், அதிலிருந்து அந்த மக்களால் மீண்டு வர முடியவில்லை.
[embed]https://twitter.com/offl_Lawrence/status/1066546682815406080?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1066546682815406080&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Factors%2F06%2F162454[/embed]
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனங்கள், தனி மனிதர்கள், அரசாங்கத்தின் உதவிகள் தொடர்ந்து அனுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளை கட்டி தரவுள்ளார்.
கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு 50 இலவச 50 வீடுகளைக் கட்டித்தர உள்ளதாக கூறிய லாரன்ஸ், தற்போது அவர் சொன்னது போலவே பாதிக்கபட்டவர்களை நேரில் சந்தித்து வீடுகளை கட்ட துவங்க உள்ளார். அதன் முதற்கட்டமாக வயதான முதியவர் ஒருவருக்கு வீடை கட்டி தரவுள்ளார் லாரன்ஸ். அந்த உருக்கமான விடியோவை நீங்களே பாருங்கள்.