ஒரு வாரத்துக்கு முன்னாடி கல்யாணத்த நிறுத்திடலாம்ன்னு நெனச்சேன் – நெடுங்சாலை, கருடன் பட நடிகை சொன்ன பகிர் தகவல்

0
18
- Advertisement -

கல்யாணம் பண்ணது தப்பு என்று கருடன் பட நடிகை ஷிவதா நாயர் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருப்பவர் ஷிவதா நாயர். இவர் தமிழில் பிக் பாஸ் ஆரி நடிப்பில் தமிழ் திரைப்பட துறையில் வெற்றிகரமாக வசூலை தந்த நெடுஞ்சாலை படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனேன்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் ஜீரோ, அதே கண்கள், மாறா போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். படத்தில் நடித்தவர்தான் ஷிவதா. மேலும், இவர் தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் நடித்து இருக்கிறார். இதனிடையே இவர் முரளிகிருஷ்ணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது. திருமணத்திற்கு பிறகும் இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

கருடன் படம்:

அந்த வகையில் சமீபத்தில் இவர் தமிழில் வெளிவந்த கருடன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூரி. இவர் நடிப்பில் வெளிவந்த படம் தான் கருடன். இந்த படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், மைம் கோபி, ஆர் வி உதயகுமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கி இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருந்த இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ஷிவதா பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகை ஷிவதாயிடம் தொகுப்பாளர், அவசரப்பட்டு கல்யாணம் செய்து கொண்டேன் என்று என்னைக்காவது யோசித்து இருக்கிறீர்களா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர், ஆம் யோசித்து இருக்கிறேன். காரணம், என் திருமணத்தின் போது தான் தமிழில் நெடுஞ்சாலை, மலையாளத்தில் சூ சூ என்ற படம் வெளியாகியிருந்தது. அப்போது மலையாளத்தில் வெளிவந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட்.

-விளம்பரம்-

திருமணம் குறித்து சொன்னது:

அந்த சமயம் பார்த்து என்னுடைய திருமணம் உறுதியானது. எல்லோருமே இப்போதானே படம் ஹிட்டாகி இருக்கு. அதற்குள் திருமணமா? ஏன்? என்றெல்லாம் கேட்க தொடங்கினார்கள். இதனால் எனக்கு சந்தேகமே வந்தது. ரொம்ப குழம்பி விட்டேன். ஒரு கட்டத்தில் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாமா? என்ற சந்தேகம் வந்தது. என்னுடைய கணவரிடமும் கல்யாணத்தை நிறுத்தலாமா என்றெல்லாம் கேட்டேன். அவர், அதெல்லாம் தேவையில்லை.

கணவர் குறித்து சொன்னது:

நீ உன்னுடைய விருப்பப்படி இரு என்று எனக்கு சப்போர்ட் பண்ணார். சொல்லப்போனால் திருமணத்திற்கு பிறகுதான் நான் நிறைய படங்களில் நடித்தேன். அவர் என்னுடைய வாழ்க்கையில் வந்த பிறகுதான் என்னுடைய சினிமா கேரியர் நன்றாக சென்று கொண்டிருக்கின்றது என்று கூறியிருக்கிறார்.

Advertisement