தன்னுடைய பாட்டி குறித்து கௌதம் கார்த்திக் பதிவிட்டிருக்கும் உருக்கமான பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கௌதம் கார்த்திக். இவர் தமிழ் சினிமாவின் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் சிப்பாய்,என்னமோ எதோ, வை ராஜா வை, இந்திரஜித், தேவராட்டம் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். ஆனலும், இவருடைய படங்கள் எல்லாம் பெரிதாக மக்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ஆனந்தம் விளையாடும் வீடு. இந்த படத்தில் சினேகன், சரவணன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக விமர்சனரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது.

Advertisement

கௌதம்- மஞ்சுமா காதல்:

இந்த படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக் அவர்கள் ஆயுத சத்தம், செல்லப்பிள்ளை, பத்து தல, 1947 போன்ற பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே கௌதம்- மஞ்சுமா காதல் இணையத்தில் வைரலாகி இருந்தது. தேவராட்டம் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்து இருந்தார்கள். அதோடு இருவரும் தேவராட்டம் படப்பிடிப்பில் இருந்த போது ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பித்தனர். பின் இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டி விட்டார்கள்.

கௌதம்- மஞ்சுமா திருமணம் :

இந்த ஆண்டின் இறுதியில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாக தகவல் திருமணம் இருந்தது. பின் அனைவரும் எதிர்பார்த்த படி சமீபத்தில் தான் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகன் திருமணம் உறவினர்களின் முன்னிலையில் எளிமையாக நடந்தது. இவர்களுடைய திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா திருமணம் எந்த ஒரு ஆடம்பரம் இல்லாமல் மிகவும் எளிமையாக இருந்ததால் பலரும் பாராட்டி இருந்தார்கள்.

Advertisement

கௌதம் கார்த்தி பதிவு:

இவர்களின் திருமண புகைப்படம் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் கௌதம் கார்த்திக் தன்னுடைய பாட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, கௌதம் கார்த்தி அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாட்டியின் காலில் ஆசீர்வாதம் வாங்கிய புகைப்படம் பதிவிட்டு கூறியிருப்பது, மிகவும் இனிமையான, அன்பான நபரான என்னுடைய பாட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Advertisement

பிறந்தநாள் வாழ்த்து:

என் அன்பான பாட்டி எங்கள் முழு குடும்பத்தில் மதிப்பு மிக்க நபராக இருக்கிறார். எங்கள் குடும்பத்தைப் பிரியாமல் ஒன்றாக வைத்திருக்கும் அவருக்கு நன்றி. அவர் ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் நேர்மையாகவும், அன்பாகவும் இருப்பதை நான் பார்க்கிறேன். அதற்கு அவருக்கு என்னுடைய நன்றி. எங்களை எப்போதும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் எனது பாட்டி மகிழ்ச்சியாக இருக்க நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement