நடிகர் விக்ரமிற்கு தற்போது 51 வயதாகிறது. ஆனாலும் இன்னும் 30 வயது இளைஞனை போல தோற்றமழிக்கிறார். இவருக்கு துருவ் என்ற மகன் உள்ளார். அவர் தற்போது வர்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமவிற்கு அறிமுகம் ஆகிறார்.
இந்த படத்தினை இயக்குனர் பாலா இயக்குகிறார். தெலுங்கில் வெளியாகி ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் உருவாகிறது இந்த படம்.
அவருடைய அப்பா விக்ரம் தற்போது துருவ நட்சத்திரம் மற்றும் சாமி-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் விக்ரம் கூறியதாவ்து,
வர்மா படத்தில் என் மகன் கமிட் ஆகவில்லை என்றால் நான் அந்த படத்தில் நடித்திருப்பேன். பாலா இயக்கும் இந்த படத்தில் மீண்டும் பலாவின் இயக்கத்தில் நடிப்பது அலாதியானது எனவும் கூறினார் விக்ரம்.
பாலாவின் சேது படத்தில் நடித்த பிறகு தான், விக்ரமிற்கு ஒரு ப்ரேக் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.