ஜி20 உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் முன் விவசாயம் பற்றி பேசவிருக்கும் பழங்குடியின பெண்கள். எந்த விவசாயம் பற்றி தெரியுமா?

By Dhilip Kumar · 9/9/2023

தற்போது நடைபெற்ற வரும் ஜி 20 உச்சி மாநாட்டில் ஒடிசாவை சார்ந்த இரண்டு பழங்குடியில் பெண்கள் உலகத் தலைவர்களுக்கு திணை விவசாயத்தின் நன்மைகளைப் பற்றி கூற போகிறார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது. உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜி 20 அமைப்பின் முக்கியமான நாடு டெல்லியில் இன்று தொடங்கி நாளையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள வருகை தந்த உலக தலைவர்களை இந்திய நாட்டின் பிரதமர் மோடி வரவேற்றார்.

இதில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்திய அரசாங்கம் 2023 ஆண்டை சர்வதேச திணை ஆண்டாக அறிவிக்க கோரி ஐக்கிய நாடுகள் சபைகளுக்கு முன்பு முன்மொழிந்தது. இந்தியா திணை உணவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஓடிஷவை சேர்ந்த பழங்குடி சமூகங்களை சேர்ந்த சுபாசா மோஹந்தா மற்றும் ரைமதி கியூரியா என்று பழங்குடி பெண்கள் உலக  தலைவர்களுக்கு முன் திணை விவசாயம் பற்றி நன்மைகளைப் பற்றி கூற அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

தினை விவசாய நுட்பங்களை ஊக்குவிப்பதில் இரண்டு பழங்குடி பெண் விவசாயிகளும் ஈடுபட்டு இருக்கின்றனர். இவர்கள் விடுத்த மாநிலத்தில் மிலாட் மிஷினில் கீழ் முப்பது மாவட்டங்களில் 177 மையங்களில் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதில் மாண்டியா ததி என்ன அறியப்படும் சுபாசா வெற்றிக் கதையை 2 மாநாட்டில் அரங்கேற இருப்பது. அவரது மாவட்டத்தில் சார்ந்த பெரும்பாலான விவசாயிகள் திணை விவசாயத்தில் ஈடுபாடு காட்டவில்லை. இருப்பினும் சுபாசா ஒடிசா மாநில அரசின் மில்லட் மிஷன்னின் ஆதரவுடன் 2018 ஆம் ஆண்டு பழமையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி திணை சாகுபடி தொடங்கினார்.

மேலும் அவர் பல ஆண்டுகளாக ஒரு வெற்றிகரமாக விவசாயியாக உருவெடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் திணை சாகுபடி மூலம் தனது சமூகத்தை வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவி இருக்கிறார் மேலும் பழங்குடிய பெண்களுக்கு திணை விவசாயத்தில் ஈடுபடும் அறிவுறுத்தி வருகிறார். இது குறித்து பேசி அவர் நான் வெள்ளரி பூசணி மற்றும் பிற காய்கறிகளை பயிரிட்டு வந்தேன் அது அந்த அளவுக்கு எனக்கு லாபம் தரவில்லை ஆனால் தினை விவசாயதில் ஈடுபட்டேன் இது எனக்கு பொருளாதாரத்தை முன்னேற்றம் தந்தது என்று கூறினார். திணை பயிர் வகைகளுடன் நலத்திற்கு ஆரோக்கியமும் நன்மையும் தரும் இந்த வாய்ப்பு எனக்கு அளித்த ஓடிஷா மாநில அரசுக்கு நன்றி கூறுகிறேன் என்று கூறினார்.

இவர் தன்னுடைய பங்களிப்பதற்காக மாநிலம் மற்றும் தேசிய விருதுகள் பலவற்றை பெற்று உள்ளார் மேலும் இவர் மில்லட் மிஷன் பற்றி ஜி 20 மாநாட்டில் பங்கேற்று கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற உலக  அளவிலான திணை பற்றிய மாநாட்டில் பங்கு பெற்ற அப்போது நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோரிடம் உரையாடினார். இதுகுறித்துக் கூறிய அவர் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தினை விவசாயம் மற்றும் அதன் பலன்களை பற்றி அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறேன் என்றும் கூறினார்.

behindtalkies AMP · Quick view
View full