கண்களை மூடிக்கொண்டு ஐஸ்வர்யா மேனன் பதிவிட்ட புகைப்படம் – மூட வேண்டியதை மூடுங்க என்று கேலி செய்யும் ரசிகர்கள்.

0
2783
iswarya
- Advertisement -

தமிழ் சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகை நடிகர்கள் ஆரம்பத்தில் சினிமாவில் ஒரு சிறு பிரேம்களில் தோன்றியவர்கள் தான். அவ்வளவு ஏன் இன்று தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளாக திகழ்ந்து வரும் திரிஷா, சமந்தா என்று பல நடிகைகள் ஆரம்ப காலத்தில் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் தான். அந்த வகையில் இளசுகளின் லேட்டஸ்ட் கிரஷஷாக திகழ்ந்து வரும் இவரும் ஒருவர் தான்.

-விளம்பரம்-
View this post on Instagram

Peek-a-boo. I see you. 👻

A post shared by Iswarya Menon (@iswarya.menon) on

அட, வேறு யாரும் இல்லைங்க இவர் நடிகை ஐஸ்வர்யா மேனன் தான். 1995 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவர் ஈரோட்டில் வளர்ந்தார். சென்னையில் உள்ள எஸ் ஆர் எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். இவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானது 2013 ஆம் ஆண்டு வெளியான ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படம் மூலம் தான்.

- Advertisement -

ஆனால், அந்த படத்திற்கு முன்பே சித்தார்த் நடிப்பில் வெளியான “தீயா வேலை செய்யணும் குமாரு” என்ற படத்தில் ஹரிணி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஹன்ஷிகாவின் தோழியாக நடித்துள்ளார்.அதே போல காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சில காட்சிகளில் தோன்றியுள்ளார்.இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் சீரியலில் நடித்துள்ளார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று.

ஆனால், இவர் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டது என்னவோ ‘தமிழ் படம் 2’ மூலம் தான். அந்த படத்திற்கு பின்னர் ‘நான் சிரித்தாள்’ படத்திலும் நடித்திருந்தார். சமூக வளைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுஇருந்தார் . இதை கண்ட ரசிகர்கள் பலரும் மூட வேண்டியதை மூடுங்க என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement