என்ன ஆட்சி பண்றீங்க, விஜயின் அந்த கோபம்தான் அரசியல் என்ட்ரி- இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் விளக்கம்

0
83
- Advertisement -

நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கருத்து தான் இப்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. கோலிவுட்ல பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூலில் சாதனையும் செய்து வருகிறது. இந்நிலையில்தான் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கி தளபதி விஜய் அரசியல் வாழ்க்கையில் இணைந்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும் நேற்று, சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள், தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் என பலரும் வாழ்த்துக்கள் பதிவிட்டிருந்தனர். இதனிடையே கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் 50-ற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

- Advertisement -

விஜயின் பிறந்தநாள்:

அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய், பாதிக்கப்பட்டோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தமிழ்நாடு சோகத்தில் மிதக்கும் நிலையில் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு விஜய் உத்தரவிட்டிருந்தார். அதனால் எளிமையான முறையில் அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஆங்காங்கே நேற்று நடைபெற்றது என்று கூறலாம். நேற்று விஜய் நடித்துள்ள ‘கோட்’ படத்திலிருந்து சில பைட்ஸ் மற்றும் இரண்டாவது பாடல் ரிலீஸ் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

ஜேம்ஸ் வசந்தன் கூறியது:

மேலும் நிகழ்ச்சி ஒன்றில் விஜயின் அரசியல் என்ட்ரி குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேசுகையில், நமக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. நாம் பொதுமக்கள் பக்கம் நிற்கிறோம். அதனால் நாம் வாக்களிக்க போகும்போது அரசியல்வாதிகள் மீது நமக்கு பல விஷயங்களில் கோபம் வருகிறது. என்ன ஆச்சு செய்றாங்க, எதையும் சரியாக செய்வதில்லை என திட்டுகிறோம். அந்த மாதிரி இவ்வளவு நாள் விஜய் மக்கள் பக்கம் தான் இருந்தாரு.

-விளம்பரம்-

ஜேம்ஸ் வசந்தனின் அட்வைஸ்:

இப்பதான் விஜய் கோட்டை கடந்து அரசியல் பக்கம் போகிறார். அரசியல்வாதிகள் நமக்கு சரியா பண்ண வேண்டியதை பண்ணவில்லை, மக்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கவில்லை. என்னால் அதை எல்லாம் சரி செய்ய முடியும் என நினைத்து தான் அவர் கோட்டை தாண்டி போயிருக்கார். அவருக்கு கண்டிப்பாக ஏதோ கோபம் இருந்திருக்கும். அப்போ விஜய்க்கு நம்ம விட நல்ல தெளிவு இருக்கு. அவர் மக்களுக்காக நிறைய விஷயங்கள் மாற்றவும், திருத்தவும் நினைக்கிறார். அதனால் விஜய்க்கு அறிவுரை சொல்ல வேண்டிய இடத்தில் நான் இல்லை எனக் கூறியுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தல்:

மேலும் .நடிகர்கள் விஜய் கடந்த பிப்ரவரி மாதம், “தமிழக வெற்றிக் கழகம்” கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்றத் தேர்தல்தான் தன்னுடைய இலக்கு என்று குறிக்கோளோடு தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறார் நடிகர் விஜய். அவருடைய அரசியல் வருகைக்கு ஆதரவும், எதிர்ப்பும் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் நடந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் திமுக அரசுக்கு, விஜய் கண்டனம் தெரிவித்திருந்தது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பூகம்பத்தை உண்டாக்கியது.

Advertisement