தமிழில் 2014 ஆம் ஆண்டு “பொறியாளன்” என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆனந்தி. ஆந்திர மாநிலம் தெலுங்கானாவை சேர்ந்த இவர் முதன் முதலில் தெலுங்கில் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஈ ராஜூலு” என்ற பதில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.
The heroine character has to drive car in most of the scenes of#AlaudhininArputhaCamera Surprisingly @anandhiactress stunned us with her fine driving, that too left hand driving in Europe roads with their strict traffic laws. She saved me from loosing a fortune paying fine pic.twitter.com/QO616mozpR
— Naveen.M (@NaveenFilmmaker) July 16, 2018
தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கயல்’ படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு கயல் ஆனந்தி என்று பெயர் வந்தது. அந்த படத்திற்கு பின்னர் “த்ரிஷா இல்லனா நயன்தாரா”, ”எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ போன்ற படங்களில் இவரது கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது.
தற்போது நடிகை ஆனந்தி “அலாவுதீனின் அற்புத கேமரா” என்று புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை “மூடர் கூடம்” படத்தை இயக்கிய இயக்குனர் நவீன் இயக்கி அவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார் . ஒயிட் ஷேடோஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கான ஷூட்டிங் தற்போது ஐரோப்பாவில் நடந்து வருகிறது.
Clutch brake Ellam kall ettuma nu kelunga nanba.
— மதிவதனியின் சரவணன் (@sarukr8558) July 16, 2018
ஆனந்தி வண்டி ஓட்றத பார்த்திருந்தா இப்படி ஒரு கேள்விய நீங்க கேட்டிருக்க மாட்டிங்க. அந்த பொண்ன சாதாரணமா நெனச்சிடாதிங்க. @anandhiactress is super smart.
— Naveen.M (@NaveenFilmmaker) July 16, 2018
இந்நிலையில் நடிகை ஆனந்தி அங்கு ஆண்கள் ஓட்டும் அதிவேக ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றை ஒட்டியுள்ளாராம். அவர் பைக் ஒட்டிய புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் நவீன் “ஐரோப்பா நாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப சரியாக பைக் ஒட்டி அபராதம் என்ற விஷயத்தில் இருந்து என்னை காப்பாற்றிவிட்டார் ” என்று வேடிக்கையாக பதிவிட்டுள்ளார்.