அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல், நித்யா மேனன் ஆகியோர் நடித்து சென்ற வருட தீபாவளிக்கு வெளிவந்த படம் மெர்சல். இந்த படம் வெளிவருதற்குள் பட்ட பாடு சொல்லி மாலாதது.
இருந்தும் இந்த தடையை மீறி படம் வெளியாகி செம்ம ஹிட் அடித்தது. இந்த ஹிட்டிற்கு மிகப்பெரிய காரணம் தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் தான். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெரும் மிகப்பெரிய விழாவான ‘டெகோபேஸ்ட்’ திருவிழாவில் மெர்சல் படத்திற்கு இந்த வருடத்தின் பேவரட் படத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதினை படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மனி பெற்றுக்கொண்டார். மேலும், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள அவர், தளபதி விஜய்’நா மாஸ் என பதிவு செய்து விஜய் ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார்.
#Mersal was voted the #FavouriteFilmOfTheYear by #AnnaUniversity students at #Techofes #Thankyou #TeamWork @ThenandalFilms @MuraliRamasamy4 #ThalapathyVijay na mass ! pic.twitter.com/XZmejxxd9O
— Hema Rukmani (@Hemarukmani1) February 16, 2018