மெர்சல் நாளை வெளிவரவுள்ளது. ரசிகர்களை செம்ம கொண்டாட்டத்திற்கு எடுத்து செல்லவுள்ளது. தளபதியை ஸ்கிரீனில் பார்த்தால் போதும் என்று ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்-ன் 100-வது படமாக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `மெர்சல்‘.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாளை ரிலீசாக இருக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் மெர்சல் எத்தனை திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வரை மொத்தம் 3292 தியேட்டர்கள் புக் ஆகியுள்ளது என அந் நிறுவனம் அறிவித்துள்ளது.
மெர்சல் படத்தில் புறாவை வைத்து எடுக்கப்பட்ட காட்சி கிராபிக்ஸ் என் ஆதாரம் தராததால் விலங்குகள் நல வாரியம் படக்குழுவிற்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தது. இது சம்மந்தமான மீட்டிங் நேற்று காலை 10 மணி முதல் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அது சம்மந்தமான நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டு படத்திற்கு அந்த புறா காட்சிகளுக்கு ‘ஆட்சேபனை இல்லை ‘ ஒளிபரப்பிக்கொள்ளாளம் என்ற NOC – நோ அபிஜக்சன் சான்றிதலை கொடுத்துள்ளது விலங்குகள் நல அமைப்பு வாரியமான AWBI.
இதனால் படத்தில் எந்த ஒரு காட்சியும் கட் செய்யப்படாமல் அப்படியே வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் மொத்த ரன் டைம் 2 மணி நேரம் 47 நிமிடங்கள் ஆகும். இதனால் உற்சாகத்தில் உள்ள படக்குழு டிக்கெட் முன்பதிவு சம்மந்தமான வேலைகளை முடுக்கியுள்ளது. இந்நிலையில் இப்படம் மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளது . தற்போது பல திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கிவிட்டது, அனைத்து இடங்களிலும் ஹவுஸ் புல் தான், இதில் நேற்று சென்னையின் பிரபலமான திரையரங்கம் வெற்றியில் முன்பதிவு தொடங்கியது.
மேலும், இந்தியளவில் அதிகம் டிக்கெட் புக்கிங் செய்த படமாக மெர்சல் வந்துள்ளது, கண்டிப்பாக இதேபோல் வசூலிலும் சாதனை படைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.