மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் நினைவிடத்தில் நடிகர் மோகன் மரியாதை செலுத்தியிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் 80, 90 காலகட்டங்களில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் மோகன். ரஜினி , கமல், விஜயகாந்த் என்று பல முன்னாடி நடிகர்கள் பட்டைய கிளப்பி கொண்டு இருந்த கால கட்டத்தில் இவர்களுக்கு எல்லாம் செம்ம காம்படீசன் கொடுத்தவர் நடிகர் மோகன். 80களில் இவரது நடிப்பின் மூலம் தனெக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர்.

எந்த ஊரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுலகில் கொடி கட்டி பறந்தவர் மோகன். இவர் 1982 ஆம் ஆண்டு பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின் இவருடைய எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட். அதோடு வருடம் வருடம் சிறந்த நடிகர் விருதையும் இவர் தான் பெறுவார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் சக்கை போடு போட்டு கொண்டு நடித்தார். இவரை எல்லோரும் மைக் மோகன் என்று தான் அழைப்பார்கள்.

Advertisement

மோகனின் திரைப்பயணம்:

சொல்லப்போனால், இவர் ஒரு நாளிற்கு 18 மணி நேரம் நடிப்பிலேய நேரத்தை செலவிட்டார். கிட்டத்தட்ட இவர் 70 படங்களுக்குப் மேல் நடித்து தூள் கிளப்பி இருந்தார். நடிகர் மோகனின் படம் என்றாலே நிச்சயம் வெற்றி விழா கொண்டாடும் அளவிற்கு ஓடும் என்று எல்லோரும் பேசுவார்கள். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படம் எல்லாமே வித்தியாசமான கதை களம், சூப்பர் ஹிட் பாடல்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். கமலஹாசனுக்கு அடுத்த படியாக காதல் மன்னனாக வலம் வந்தவர் நடிகர் மோகன். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த மோகன் உருவம் படத்திற்கு பின் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

மோகன் சந்தித்த தோல்வி படங்கள்:

அதன் பின்னர் 9 ஆண்டுகள் கழித்து படத்தில் நடித்தார். இருந்தாலும், முன்பு போல் இவரால் வெற்றி படங்களை கொடுக்க முடியவில்லை. அதன் பின்னர் இறுதியாக தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான சுட்டபழம் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார் மோகன். ஆனால், இந்த படமும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் மோகன். இந்த படத்தை இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கி வருகிறார்.

Advertisement

மோகன் நடிக்கும் படம்:

இந்த படத்திற்கு ‘ஹரா’ என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் மோகனுக்கு ஜோடியாக குஷ்பு நடித்துள்ளார். லியாண்டர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும், இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் தான் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பினை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் மோகன் அவர்கள் மறைந்த எஸ்.பி பாலசுப்பிரமணியம் நினைவிடத்திற்கு சென்றிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement

மோகன் செலுத்திய மரியாதை:

இதை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த மோகன் ‘நான் நிறைய படங்கள் நடித்திருந்தாலும், பாடகராக நடித்தது வெகு சில படங்கள்தான். அந்தப் படங்களில் இளையராஜாவின் இசையில், எஸ்பிபி குரலில் இடம்பெற்றிருந்த பாடல்கள் பெரிய வெற்றியடைந்ததும் என்னை ‘மைக்’ மோகன் என்று மாற்றிவிட்டார்கள் என்று கூறி இருந்தார். தற்போது மோகன் அவர்கள் எஸ்பிபி நினைவிடத்திற்கு சென்று அவருக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார். அந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement