பிரிந்த பிறகு நட்பு எதற்கு என்று சமந்தாவின் கேள்விக்கு நாக சைத்தன்யா அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கு சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நாக சைதன்யா. இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார். இவர் ஜோஸ் என்ற படத்தின் மூலம் தான் சினிமா துறைக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

இதனிடையே நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவிற்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் ஆண்டு கொண்டார்கள். பின் இருவரும் தென்னிந்திய சினிமா உலகில் மிக சிறந்த ஜோடிகளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள்.

Advertisement

சமந்தா-நாக சைத்தன்யா பிரிவு:

இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும், இவர்கள் இருவரும் பிரிவிற்கு பிறகு தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் நாக சைதன்யாவும் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். தற்போது இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் கஸ்டடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மே 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

கஸ்டடி படம்:

இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி, சரத்குமார், அரவிந்த சாமி, வெண்ணிலா கிஷோர், சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சமந்தா குறித்து நாக சைத்தன்யா அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

சமந்தா சொன்ன பதில்:

சமந்தா-நாக சைத்தன்யா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று.பிரிவிற்கு பிறகு இருவரும் தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சமந்தா சில பேட்டிகளில் தங்களுடைய விவாகரத்து குறித்து பேசி இருந்தார். அதில் அவர், நாங்கள் விவாகரத்து செய்து கொண்டாலும், இருவரும் நட்பாக இருக்கிறோம் என்றெல்லாம் கூறி இருந்தார்.

Advertisement

நாக சைத்தன்யா அளித்த பதில்:

இந்த நிலையில் இதுகுறித்து நாக சைத்தன்யாவிடம் கேட்டபோது அதற்கு அவர், பிரிவோம் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கு பிறகு நட்பு எதற்கு? இது என்னை மிகவும் எரிச்சல் அடையை செய்கிறது. எனக்கு அப்படிப்பட்ட நட்பு தேவை இல்லை என்று கூறியிருக்கிறார். தற்போது நாக சைத்தன்யாவின் இந்த பதில் சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement