“இன்னும் வலி , எதிரிக்கு கூட இப்படி வர கூடாது” – ஒரு வருடம் கழித்து பாண்டியன் ஸ்டார்ஸ் நடிகர் உருக்கம்

0
721
venkat
- Advertisement -

சில வருடங்களாகவே ஒட்டுமொத்த உலகையும் கொரோனோ ஆட்டிப்படைத்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதனால் பல லட்சக்கணக்கான உயிர்கள் இழந்தும், பாதிக்கப்பட்டும் இருந்தார்கள். அதோடு இந்த கொரோனாவால் மக்கள் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மக்களது அவஸ்தை பட்டிருந்தார்கள். மேலும், கொரோனா ஏற்படுத்திய தாக்கம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகவே நிலவிக் கொண்டு தான் இருக்கிறது. பலருக்கும் இது மோசமான அனுபவத்தை தந்து சென்றிருக்கின்றது. இன்னும் இந்த கொரோனாவின் தாக்கம் பலரையும் விட்டுவைக்கவில்லை.

-விளம்பரம்-

அந்த வகையில் கொரோனாவால் ஏற்பட்ட வலியும், வேதனையும் மறையாமல் இருக்கிறது என பிரபல சீரியல் நடிகர் சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று பதிவிட்டு இருக்கிறார். விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் வெங்கட். இவர் கொரோனாவால் பட்ட வேதனைகளை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஓராண்டு நிறைவடைந்து விட்டது.

- Advertisement -

ஆனால், அது ஒரு மகிழ்வான தினம் அல்ல. ஒரு வருடம் முடிந்து விட்டது. இருந்தாலும் இன்னும் அதனுடைய வலி, வேதனை, அழுத்தம், பயம் எதுவும் குறைந்தபாடில்லை. துரோகி மற்றும் எதிரிக்கு கூட இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது. அனைவரும் உங்களை பார்த்துக் கொள்ளுங்கள். இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை சாப்பிடுங்கள் என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பல திருப்பங்களுடன் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

அதிலும் குறிப்பாக தமிழில் இவர் பாடிய சில்லுனு ஒரு காதல் படத்தில் இருந்து இடம்பெற்ற முன்பே வா, வெயில் படத்தில் இடம்பெற்ற உருகுதே மருகுதே, அந்நியன் படத்தில் இடம்பெற்ற அண்டங்காக்கா கொண்டக்காரி, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம்பெற்ற மன்னிப்பாயா போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் இன்றும் வரவேற்கப்படுகிறது. மேலும், இவருக்கு அடுத்ததாக அதிக சம்பளம் வாங்கும் பாடகியாக சாதனா சர்கம் இருக்கிறார்.

-விளம்பரம்-

அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசமான கதை. பாண்டியன் ஸ்டோரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வெங்கட் ரங்கநாதன். இவர் முதன் முதலாக தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தான் சின்னத்திரையில் அறிமுகமானர். அதன்பிறகு சீரியல் நடிகர் ஆனார். பின் இவர் கனா காணும் காலங்கள், ஆண்பாவம், மாயா, தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க தெரிந்த மனமே போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார்.

Advertisement