கணவர் நினைவாக பிரேமலதா குத்திக்கொண்டு டாட்டடூ – அதுவும் எந்த புகைப்படம் என்று பாருங்க.

0
465
- Advertisement -

பிரேமலதா விஜயகாந்த் கையில் போட்டு டாட்டூ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கேப்டன் விஜயகாந்தின் இறப்பு செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் நல இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

-விளம்பரம்-

விஜயகாந்த் மறைவு அவரின் குடும்பத்தை மட்டும் இல்லாமல் தமிழக மக்களையும் அதிகம் பாதித்து இருக்கிறது. மேலும், அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் பல்வேறு தெரிவித்து இருந்தார்கள் . பின் விஜயகாந்தின் உடலுக்கு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதோடு பிரபலங்கள் பலர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாததால் அவருடைய நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

- Advertisement -

விஜயகாந்த் இறப்பு:

தமிழகத்தில் பல இடங்களில் கேப்டன் விஜயகாந்தினுடைய புகழ், நிகழ்ச்சிகளும் கூட்டங்களும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கு நினைவேந்தல் கூட்டம் ஒன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றிருக்கிறது. இதில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். அதில் விஜயகாந்த் குறித்து பல விஷயங்கள் பகிரப்பட்டது. இதனை அடுத்து விஜயகாந்த்திற்கு நடிகர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

விஜயகாந்த்திற்கு நினைவேந்தல் கூட்டம்:

இதனை அடுத்து பிரேமலதா அவர்கள் விஜயகாந்தின் இறுதி நிமிடங்களை குறித்து கட்சிக் கூட்டத்தில் பகிர்ந்து இருந்தார். அதில் இனி மக்களுக்காகவும் கட்சித் தொண்டர்களின் நலனுக்காகவும் தான் இருப்பேன் என்றெல்லாம் பிரேமலதா உறுதிமொழி எடுத்திருந்தார். அதோடு விஜயகாந்த் கையில் இருந்த மோதிரத்துடனே உடலும் அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது என்று பிரேமலதா கூறி இருந்தார்.

-விளம்பரம்-

பிரேமலதா டாட்டூ:

தற்போது விஜயகாந்தினுடைய நினைவிடத்திற்கு பிரபலங்கள், பொதுமக்கள் என பலருமே அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இன்னொரு பக்கம் விஜயகாந்த் பெயரில் அன்னதானம் செய்வது குறித்து வேலைகளை பிரேமலதா அவருடைய மகன்களும் செய்து வருகிறார்கள். அதேபோல் விஜயகாந்த் என்றும் நம்மை விட்டு நீங்காமல் இருக்க அவருடைய நினைவிடத்தை ஒரு கோவில் போல பிரேமலதா விஜயகாந்த் பராமரித்து வருகிறார்.

வைரலாகும் வீடியோ:

இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் செய்திருக்கும் செயல்தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, விஜயகாந்த் எப்போதும் தன்னுடன் இருக்கும் விதமாக டாட்டூ ஒன்றை பிரேமலதா போட்டு இருக்கிறார். தன்னுடைய வலது கையில் குத்தியிருக்கிறார். அதில் விஜயகாந்த் சிரித்தபடி இருக்கும் புகைப்படத்தை தான் வரைந்து இருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் வைரல் ஆகி வருகிறது.

Advertisement