பாலிவுட் சினிமாவில் பாஜிராவ் மஸ்தானி ,பத்மாவதி போன்ற படத்தில் நடித்தவர் நடிகர் ரன்வீர் சிங். தனது இளம் வயதிலேயே இது போன்ற வரலாற்று சிறுப்புமிக்க படங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிகாட்டியிருந்தார்.
இந்த இரு படங்களில் தனது உடலை அந்த கதைக்கு ஏற்றார் போல் மிகவும் கட்டுமஸ்தாக வைத்திருந்தார் ரன்வீர் சிங்.படத்திற்காக தனது முழு அற்பணிப்பையும் அளிக்கும் இவர் பத்மாவதி படத்திற்கு பிறகு தற்போது சோயா அக்தர் இயக்கவிருக்கும் கள்ளி பாய் என்ற படத்தில் நடிக்க ஒப்பதமகியுள்ளார்.இந்த படத்திற்காக கட்டுமஸ்தான தனது உடலை குறைத்து மிகவும் மெல்லிய தோற்றத்தில் மாறியிருக்கிறார் ரன்வீர் சிங்.
தான் இதற்கு முன்னால் வைத்திருந்த உடலையும் தற்போது வைத்திருக்கும் உடலையும் புகைப்படம் எடுத்து அதனை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.அந்த புகைப்படத்தை பார்த்த பலர் படத்திற்காக தன்னை இப்படி மாற்றிக்கொண்ட ரன்வீர் சிங்கை பார்த்து மிகவும் பாராட்டி வருகின்றனர்.