கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக இருக்கும் ஆர்.கே சுரேஷ் (மருது, தாரை தப்பட்டை) மற்றும் சின்னத்திரை நடிகை திவ்யா ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயம் நடைபெற்றது.
ஆனால் அடுத்த மாதமே இந்த திருமணம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. அதற்கான காரணம் என்னவென்று தற்போது கூறியுள்ளார் நடிகை திவ்யா.
அவர் மிகவும் நல்ல மனிதர். ஆனால் எங்களுக்குல் நிறைய விஷயங்கள் வேறுபடுகிறது. மேலும் கருத்து வேறுபாடுகளும் உள்ளது. இந்த கருத்துவேறுபாடுகள் பெரிதாகி திருமணம் முடிந்து பெரும் பிரச்சனை வர வேண்டாம் என எங்களுக்குள் நாங்களே பேசி முடிவு செய்தோம்.
இதனால் தான் திருமண நிச்சயம் ஆன பின்பும் திருமணம் வேண்டாம் என பிரிந்துவிட்டோம் என கூறினார் திவ்யா.




