ராஜபாளையம் சேதூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் சமுத்திரக்கனி. தனது தந்தைக்கு சினிமா பிடிக்காது என்பதால் சினிமா பார்ப்பதே தவறு என்று தந்தை கூறியதால் 13 வயது வரை எந்த ஒரு சினிமாவையும் பார்க்காத நபர் தான் சமுத்திரக்கனி. பள்ளி நாட்களில் அவரை கட்டாயப்படுத்தி நண்பர்கள் சிலர் படத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். அப்படி அவர் முதன் முதலில் பார்த்த படம் சிவாஜி நடித்த முதல் மரியாதை திரைப்படம் தான். அந்த படம் அவருக்கு மிகவும் பிடித்து போக பின்னர் சினிமா பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். பின்னர் இந்த விஷயம் அவரது தந்தைக்கு தெரிய வர அவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளார்கள்.

ஆனாலும் அவருக்கு சினிமா மீது இருந்த ஆர்வம் போகவில்லை. இதனால் வெறும் 130 ரூபாய் பணத்தோடு சென்னைக்கு சினிமா வாய்ப்பை தேடி வந்திருக்கிறார். பின்னர் கையில் இருந்த பணமும் தீர்ந்து போக திக்குத் தெரியாமல் சென்னையில் இருந்த அவருக்கு ஒரு காவலர் உதவி, மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பி இருக்கிறார். சொந்த ஊருக்கு திரும்பிய சில காலத்திலேயே அவரது தந்தை இறந்து போக குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அவருக்கு வந்தது.

Advertisement

பின்னர் மீண்டும் சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்து இயக்குனர் கே பாலச்சந்திரன் பள்ளியில் மாணவராக சென்று சினிமாவை பயின்று இருக்கிறார். இவரை ஒரு நடிகராக அறிமுகம் செய்தது கே பாலச்சந்தர் தான். சமுத்திரக்கனி இயக்குநர் ஆவதற்கு முன்பு பாலச்சந்தர் இயக்கிய சில டிவி சீரியல்களில் நடித்திருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பான ‘ஜன்னல் – சில நிஜங்கள் சில நியாயங்கள்’, பொதிகை டிவியில் ஒளிபரப்பான ‘கடவுளுக்கு கோபம் வந்தது’, ராஜ் டிவியில் ஒளிபரப்பான ‘மர்ம தேசம், ரமணி vs ரமணி பார்ட் 2’ போன்ற டிவி சீரியல்களில் நடித்திருந்தார் சமுத்திரக்கனி.

தொடர்ந்து பாலச்சந்தரின் பல்வேறு சீரியல்களில் நடித்து வந்தார் சமுத்திரக்கனி. ஒருகட்டத்தில் பாலச்சந்தர் அவர்கள் ‘நீ சினிமாவில் நடிக்க முதலில் ஆசைப்பட்டாய் சரி, நானே உன்னை முதலில் திரைப்படத்தில் நடிக்க வைக்கிறேன் என்று 2001ஆம் ஆண்டு அவர் இயக்கிய ‘பார்த்தாலே பரவசம்’ படத்தில் சமுத்திரகனியை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். மாதவன், சினேகா, சிம்ரன், விவேக், வாலி என்று பலர் நடித்த இந்த படத்தில் சமுத்திரகனி, மருத்துவராக இருக்கும் விவேக்கிடம் இடுப்பு வலிக்கு சிகிச்சை எடுக்க வரும் ஒரு நோயாளியாக ஒரு சிறு காட்சியில் தோன்றி இருப்பார்.

Advertisement

இந்த படத்திற்கு பின்னர் சமுத்திரகனி, 2003-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த ‘உன்னைச் சரணடைந்தேன்’ திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் வெங்கட் பிரபு மற்றும் பாக்கியலட்சுமி ஜெனியும் நடித்து இருந்தனர். இதனை தொடர்ந்து விஜயகாந்தை வைத்து நெறஞ்ச மனசு படத்தை இயக்கி இருந்தார். ஆனால், இந்த இரண்டு திரைப்படங்களும் மாபெரும் தோல்விப்படமாக அமைந்து இருந்தது.

Advertisement

இதனால் சினிமாவில் நாம் கற்றுக் கொள்ளும் விஷயம் இன்னும் பல இருக்கிறது என்று உணர்ந்த சமுத்திரக்கனி வயது வித்தியாசம் பார்க்காமல் இயக்குனர் அமீரின் பருத்திவீரன் படத்தில் உதவியாளராக சேர்ந்து பணியாற்றினார். அதோடு அந்த படத்தில் கஞ்சா கருப்பு விடும் சோன்பப்படி கேட்டு வரும் ஒரு நபராக சிறு கதாபாத்திரத்திலும் தோன்று இருப்பார் சமுத்திரக்கனி. இதனை தொடர்ந்து பொய், போன்ற படங்களில் சிறு சிறு காட்சியில் தலைகாண்பித்து இருப்பார்.

அதன் பின்னரே சுப்ரமணியபுறம் படத்தில் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் படங்கள் இயக்கியிருக்கிறார்.ஒரு இயக்குநராக மட்டும் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த சமுத்திரக்கனி, அடுத்ததாக நடிகராக களமிறங்க முடிவெடுத்தார். அதன் பிறகு ‘சுப்ரமணியபுரம், ஈசன், சாட்டை, நீர்ப் பறவை, வேலையில்லா பட்டதாரி என்று பல படங்களில் நடித்தார் சமுத்திரகனி.

Advertisement