மாமியார்-அம்மா வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மீனா எடுக்கும் விபரீத முடிவு? பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை சீரியல்

0
443
- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா எடுக்கப்போகும் விபரீத முடிவு குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் டிஆர்பியில் முன்னிலையில் இருக்கிறது. அந்த வரிசையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

சீரியலில் கதாநாயகன் முத்து வீட்டில் அவருடைய தாய், முதல் மற்றும் இளைய மகனுக்கு மட்டும்தான் சப்போர்ட் செய்கிறார். முத்து படிக்கவில்லை என்றும் அவன் ஓவராக பேசுகிறான் என்றும், தன்னுடைய தந்தைக்கு ஆதரவாக நிற்கிறான். இதனாலே சிறு வயதில் இருந்தே அவருடைய தாய்க்கு முத்து மீது வெறுப்பு கோபம் இருக்கிறது. தன்னுடைய தாயின் பாசத்திற்காக முத்து ஏங்குகிறார். இன்னொரு பக்கம் கதாநாயகி பூக்கடை வியாபாரம் செய்கிறார். ஒரு விபத்தில் அவருடைய தந்தை இறந்து விடுகிறார். பின் அண்ணாமலை பேச்சால் அவரை முத்து திருமணம் செய்து கொள்கிறார்.

- Advertisement -

சிறகடிக்க ஆசை சீரியல்:

பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என்று ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சீரியலில் முத்துவின் தம்பி ரவி காதலித்த பணக்கார பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். ஏற்கனவே அந்த பணக்கார பெண்ணின் அப்பாவிற்கும் அண்ணாமலைக்கும் இடையே பல பிரச்சினைகள் இருக்கிறது. பின் ரவி-சுருதி யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

சீரியல் கதை:

கடைசியில் தான் மீனாவிற்கு இந்த உண்மை தெரிய வருகிறது. வேறு வழியில்லாமல் மீனாவும் இவர்கள் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போடுகிறார். பிறகு பெண்ணின் பெற்றோர்கள் போலீசில் அண்ணாமலை மீது புகார் கொடுக்கிறார்கள். இதனால் அண்ணாமலை ஜெயிலுக்கு போகிறார். மீனா தான் இந்த திருமணத்தை செய்து வைத்தார் என்று தவறாக புரிந்து கொண்டு முத்து உட்பட பலரும் மீனாவை திட்டுகிறார்கள். என்ன செய்வது என்று புரியாமல் மீனா அழுகிறார். பின் ரவி வந்தவுடன் அண்ணாமலை விடுதலை செய்கிறார்கள்.

-விளம்பரம்-

மீனா-முத்து இடையே தகராறு:

இருந்தாலும், மீனாவை வீட்டிற்குள் வரக்கூடாது என்று முத்து சென்று விடுகிறார். இருந்தும் மீனா வீட்டிற்கு வருகிறார். அவளை அவருடைய மாமியாரும், மூத்த மகன், மருமகள் எல்லோரும் சேர்ந்து அவமானப்படுத்தி வெளியே அனுப்புகிறார்கள். என்ன செய்வது என்று புரியாமல் மீனா தன்னுடைய அம்மா வீட்டிற்கு செல்கிறார். ஆனால் மீனா அம்மா, நீ உன்னுடைய நிலைமையை எடுத்து உன் மாமியார் கணவரிடம் சொல்லு. அதுதான் உன்னுடைய வீடு இது இல்லை என்று அவளை துரத்துகிறார். ஒரு வழியாக மீனா, முத்து வேலை செய்யும் இடத்திற்கு வருகிறார். முத்து, மீனாவிடம் கோபப்பட்டு பேசுகிறார். இறுதியில் மீனா, என் மீது எந்த தவறும் இல்லை என்று உணர்ந்து நீங்கள் வரும்போது நான் இருக்க மாட்டேன் என்று சொல்லி அழுது கொண்டே செல்கிறார்.

மீனா நிலைமை;

இந்நிலையில் முத்து பாரில் உட்கார்ந்து மது அருந்தி கொண்டு மீனா சொன்னதை நினைத்து பார்க்கிறார். இன்னொரு பக்கம் ஒருவர், மனைவி பேச்சைக் கேளுங்கள். தப்பாக நினைக்காதீர்கள், என் மனைவி தற்கொலை செய்து கொண்டாள் என்று புலம்புகிறார். இதைக் கேட்டு முத்து தன் மனைவி மீனா சொன்னதை நினைத்து பார்க்கிறார். இனிவரும் காலங்களில் முத்து மீனாவை நம்புவாரா? மீனா பக்கம் இருக்கும் நியாயம் புரியுமா? மீனா எங்கு சென்றிருக்கிறார்? மீனா தவறான முடிவு எடுப்பாரா? போன்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement