-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

பாட்டிக்காக திடீரென்று பாசமாக பேசும் விஜயா, மனோஜ்- காரணம் இதுதானா? கலகலப்பில் சிறகடிக்க ஆசை

0
74

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் குறித்து தான் இங்கு பார்க்க போகிறோம். விஜய் டிவியில் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார்.

-விளம்பரம்-

அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகினியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. உண்மையில் அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. சீரியலில் ரூம் பிரச்சனை வந்ததால் வீடு கட்டுவது குறித்து அண்ணாமலை யோசித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவர், அனைவரிடமும் மாதம் நீங்கள் எவ்வளவு காசு கொடுப்பீர்கள் என்று கேட்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொகையை சொல்கிறார்கள்.

சிறகடிக்க ஆசை :

இதை அறிந்த சுருதி அம்மா சகுனி வேலை செய்தார். இதனால் மனோஜ், முத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அடிதடி அளவிற்கு சண்டை ஏற்படுகிறது. இறுதியில் இந்த வீட்டை என் கணவர் கட்டுவார் என்று மீனா சபதம் போடுகிறார். இந்த வாரம் மனோஜ் கடையில் பெரிய ஆர்டர் வந்ததால் லட்சக்கணக்கில் பொருள்களை விற்று விடுகிறார். ஆனால், அவர்கள் கொடுத்த பணம் கள்ளப்பணம் என்று தெரிகிறது. அதையும் ஏமாற்றி விடுகிறார்கள். இதை விஜயாவிடம் சொல்லி அழுகிறார்.

சிறகடிக்க ஆசை :

-விளம்பரம்-

விஜயாவும் மீனாவின் நகையை கொடுக்க, மனோஜ் அடமானம் வைக்காமல் விற்று விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் முத்து, மீனா உடைய நகையை கொடுங்கள் என்று அண்ணாமலை இடம் கேட்கிறார்.
பின் அண்ணாமலை, விஜயாவிடம் பேசி நகையை வாங்கி கொடுக்கிறார். ஆனால், கவரிங் நகையை தான் மனோஜ் ரெடி பண்ணி தன்னுடைய அம்மாவிடம் கொடுத்தார். யாருக்கும் அந்த உண்மை தெரியாது. அந்த நகையை மீனாவும் நகைக்கடையில் காண்பிக்கிறார்கள். அது கவரிங் என்று தெரிந்தவுடன் அதிர்ச்சி ஆகிறார்கள்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

இது பற்றி தன் அப்பாவிடம் கேட்க முத்து நினைக்கிறார். பாட்டி, தன் பிறந்தநாளை சந்தோசமாக கொண்டாடட்டும் அதற்கு பின் கேட்காமல் என்று சத்தியம் வாங்கி விடுகிறார் மீனா. ஆனால், அது மனோஜ் வேலை தான் என்று முத்து கண்டுபிடித்து விடுகிறார். வீட்டில் பாட்டியின் பிறந்தநாளுக்கு ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். பின் ஒவொரு ஜோடியும் என்ன பரிசு வாங்கி கொடுப்பது குறித்து பேசி கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், முத்து பாட்டியை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

இன்று எபிசோட்:

முத்து சோகமாக இருப்பதை பார்த்து என்ன பிரச்சனை என்று கேட்கிறார். முத்து ஒன்றுமில்லை என்று சமாளித்து விடுகிறார். வீட்டில் செய்து வைத்திருக்கும் அலங்காரத்தை பார்த்து பாட்டி சந்தோசப்படுகிறார். அதற்கு பின் என்னுடைய பிறந்தநாளுக்கு மனதிற்கு பிடித்த பரிசு கொடுக்கிறீர்களோ? அவர்களுக்கு நான் ஒரு கிப்ட் தரப்போகிறேன் என்று பாட்டி சொல்கிறார். எல்லோரும் அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். எல்லோருமே என்ன பரிசு கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இனிவரும் நாட்களில் பாட்டியின் மனதை சந்தோஷப்படுத்தியவர்கள் யார்? பாட்டி கொடுக்கும் கிப்ட் என்ன? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news