நாம் அனைவருக்கும் பரிட்சையமான ஒருவர் கவிஞர் ஸ்நேகன். பாடலாசிரியரான கவிஞர் தற்போது வரை 3000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும், பிரபலமடைந்தார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த போது அனைவரையும் கட்டிப் பிடிக்கும் பழக்கம் உடையவர் ஸ்நேகன். இதனால் இவருக்கு கட்டிப்பிடி வைத்தியர் என்ற பெயரும் வந்தது. தற்போது ஸ்நேகன் படத்தில் பாடல்கள் எழுதுவதை விட நடிப்பத்தில் ஆர்வம் காட்ட துவங்கிவிட்டார்.
ஆம், இதற்கு முன்னர் ஒரு படத்தில் முழு கதாநாயகனாக நடித்திருக்கும் ஸ்நேகன் தற்போது ‘எவனும் புத்தனில்லை’ என்ற படத்தில் ஒரு ஐட்டம் சாங்கிற்கு நடனமாடவுள்ளார், இதில் என்ன ஸ்பெசல் என்றால் இந்த பாடலில் மட்டும் 200 பெண்களுடன் டான்ஸ் ஆடவுள்ளார். தற்போது அவருக்கு ஜாக்பாட் அடித்தது போல் பாடல்களுக்கு நடனம் ஆட துவங்கிவிட்டார் ஸ்நேகன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடம் பிடித்தார் ஸ்நேகன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவிஞர் தான் பட்டம் வென்றிருக்க வேண்டும் என பல குரல்கள் ஒலித்தன.