கொரோனா வைரஸ் குறித்து தினமும் கேட்கும் செய்திகள் நமக்கு அதிகப்படியான கவலையும்,பயத்தையும் ஏற்படுத்துகிறது. கொரோனா வைரஸினால் உலகமே என்ன செய்வது என்று புரியாமல் ஸ்தம்பித்து போய் உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் எண்ணிக்கை சில தினங்களாக இரு மடங்காக அதிகரித்து உள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவினால் 4067 பேர் பாதிக்கப்பட்டும், 109 பேர் பலியாகியும் உள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

மருத்துவர்கள், நர்ஸ்கள், காவல்துறை, அரசாங்கம் என பல பேர் தங்கள் உயிரை பணய வைத்து மக்களை காத்து வருகின்றனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து விதமான படப்பிடிப்பு வேலைகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள்.

இதையும் பாருங்க : இந்தியாவை விட்டு ஒழித்துக்கட்ட வேண்டிய இரண்டு விஷயங்கள். ஒன்று கொரானா மற்றொன்று ? அப்துல் காலிக் பதிவு.

Advertisement

இதனால் பிரபலங்கள் அனைவரும் வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக உடற்பயிற்சி, வீட்டு வேலை, ஜோக்ஸ், புத்தகம் படிப்பது, சமையல் போன்ற பல்வேறு வேலைகளை செய்து வருகின்றனர். ஆனாலும், சில பேர் அரசாங்கம் சொல்வதை காதிலே வாங்கி கொள்வதில்லை. நடிகர்- நடிகைகள் உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்யும்படி அறிவுறுத்தும் விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் நடிகை ஆஞ்சல் குரானா அவர்கள் ஊரடங்கு உத்தரவு போட்டும் வெளியே நடைபயிற்சி செய்து உள்ளார். அப்போது நடிகையை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. நடிகை ஆஞ்சல் குரானா அவர்கள் டெல்லியில் வசிக்கிறார். இவர் ஏராளமான இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார்.

இதையும் பாருங்க : நேற்று விளக்கேற்றியது பின்னால் இப்படி ஒரு அறிவியல் இருக்கா? விக்னேஷ் சிவன் ஏற்பட்ட சந்தேகம்.

Advertisement

ஊரடங்கு உத்தரவில் நடிகை ஆஞ்சல் குரானா அவர்கள் தனது நாய் குட்டியுடன் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் நடைபயிற்சி செய்தார். மேலும், இவர் சிறிது தூரம் சென்றதும் மூன்று தெருநாய்கள் அவரை சுற்றி வளைத்து குரைத்தன. திடீரென்று அந்த நாய்கள் அவர் மீது பாய்ந்து இடது பக்க இடுப்பு, வலது கால் முட்டியில் கடித்து குதறின. இதனால் அவர் அலறி அடித்து கத்தினார்.

Advertisement

பின் அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு நடிகை ஆஞ்சல் குரானாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறது. இது குறித்து ஆஞ்சல் குரானா அவர்களிடம் கேட்டபோது அவர் கூறியது, நான் நடைபயிற்சி செய்ய வெளியே சென்றேன். ஊரடங்கு உத்தரவால் சாலையில் யாரும் இல்லை. அப்போது நாய்கள் என்னை சுற்றி வளைத்து கடித்து விட்டன என்று வேதனை உடன் கூறினார். தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement