கணவருடன் பிரச்சனை ஏற்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற மனைவியை காவல் அதிகாரி வளைத்துப் போட்டுகொண்டு சமந்தபட்ட கணவர் மீது பொய் வழக்கு போட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகார் கொடுக்க வந்த பெண்ணை சொந்தமாக்கினாரா இன்ஸ்பெக்டர்?புகார் கொடுக்க வந்த பெண்ணை சொந்தமாக்கினாரா இன்ஸ்பெக்டர்?#inspector #police #complaint #tuticorin #dinamalar
Dinamalar – World's No 1 Tamil News Website ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಸೋಮವಾರ, ಡಿಸೆಂಬರ್ 24, 2018
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் பகுதியை சேர்ந்தவர் ஜகதீசன். இவருக்கும் இவரது மனைவி தனலக்ஷ்மிக்கும் பிரச்சனை ஏற்பட்டதால் தனலட்சுமி தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.
அந்த காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்த இன்ஸ்பெக்ட்டர் கஜேந்திரன்,தனலக்ஷ்மியை தனியாக அழைத்து சென்று தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு கணவர் ஜெகதீசன் மீதும் பொய் வழக்கு போட்டு மிரட்டியுள்ளார்.
இதனால் கணவர் ஜெகதீசன் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் இன்ஸ்பெக்ட்டர் கஜேந்திரன் மற்றும் தனலக்ஷ்மி பேசிய செல் போன் உரையாடல் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.
நன்றி : தினமலர்