சென்னையில் முக்கிய இடத்தில் கோடி கணக்கில் தளபதி விஜய் வாங்கியுள்ள வீடு தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் தளபதி விஜய் அவர்கள் புதிய வீடு வாங்கி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சென்னை நீலாங்கரையில் மிகப்பெரிய பங்களாவாக விஜயின் வீடு இருக்கிறது. அங்கு தான் விஜய் தன்னுடைய குடும்பத்துடன் இருக்கிறார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இது மட்டும் இல்லாமல் அடையாரில் விஜயின் பெரிய அலுவலகம் ஒன்று இருக்கிறது. இந்த நிலையில் இவர் புதிய வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார்.

Advertisement

விஜய் வாங்கிய புது வீடு:

சென்னையில் இதுவரை இல்லாத விலையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விஜய் அவர்கள் ஒரு பிளாட் வாங்கி இருக்கிறார். அதன் விலை மட்டுமே 35 கோடி என்று கூறப்படுகிறது. தற்போது இந்த பிளாட்டை விஜய் தன்னுடைய அலுவலகமாக பயன்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அதே வளாகத்தில் அதே விலையில் நடிகர் ஆர்யாவும் ஒரு பிளாட் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வாரிசு படம்:

சமீபத்தில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது.

Advertisement

வாரிசு படம் குறித்த தகவல்:

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். இந்த படம் குடும்ப உறவுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை என்று கூறப்படுகிறது. தற்போது படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Advertisement

தளபதி 67 படம்:

இதனை அடுத்து விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்குகிறார். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் மொத்தம் 6 வில்லன்களை வைத்து லோகேஷ் கனகராஜ் கதையை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த ஆறு வில்லன்களில் சஞ்சய் தத் மற்றும் பிரிதிவிராஜ் என இரண்டு வில்லன்கள் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement