தளபதி விஜய்யின் தந்தை சொத்து ஜப்தியாகும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன் முகங்களை கொண்டவர். 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தில் தான் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப் படங்களை இயக்கி இருக்கிறார்.

இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. மேலும், இவர் 40 வருடங்களுக்கு மேலாக சினிமா திரை உலகில் பணியாற்றி வருகிறார். கடைசியாக இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்கிய 70 வது திரைப்படம் “கேப்மாரி”. இந்த படத்தில் ஜெய், அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா, விபின் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் இன்றைய இளைஞர்கள் செய்யும் அட்டூழியங்களையும், போடும் ஆட்டங்களையும் வெட்ட வெளிச்சமாக சுட்டிக்காட்டி, அதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவான கதை.

Advertisement

எஸ்.ஏ.சந்திரசேகர் யூடியூப் சேனல்:

இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கிடைக்கவில்லை. அதற்கு பிறகு இவர் எந்த படத்தையும் இயக்க வில்லை. பின் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ என்ற யூடியூப் சேனலை தொடங்கி இருக்கிறார். அதில் அவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும், சினிமா பயணத்தையும் பற்றி பதிவு செய்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அதோடு தற்போது சினிமா உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து கொண்டிருக்கும் தளபதி விஜய்யை உருவாக்கியதும் எஸ் ஏ சந்திரசேகர் தான்.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படம்:

இந்த நிலையில் விஜய்யின் தந்தை சொத்து ஜப்தி ஆகும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான படம் சட்டப்படி குற்றம். இந்த படத்தில் நடிகர் சத்யராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படத்தின் விளம்பர செலவு 76,122 ரூபாய் ஆனது. இதை வழங்காததை அடுத்து விளம்பர நிறுவன உரிமையாளர் சரவணன் அவர்கள் சென்னை அல்லிகுளம் 25வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisement

எஸ்.ஏ.சந்திரசேகர் மீது புகார்:

திரைப் படத்தை விளம்பரப்படுத்த சந்திரசேகர் உடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும், ஒப்பந்தப்படி அவர் தொகையை வழங்கவில்லை என்றும், அதை வசூலித்துத் தர வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பணத்தை செலுத்த உத்தரவிட்டு இருந்தார். ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டும் தொகையை எஸ்.ஏ.சந்திரசேகர் தொகை வழங்கவில்லை. இதனை அடுத்து உத்தரவை அமல்படுத்த கோரி சரவணன் மனு தாக்கல் செய்திருந்தார்.

Advertisement

எஸ்.ஏ.சந்திரசேகர் வீட்டில் ஜப்தி:

இந்த மனுவை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் சந்திரசேகருக்கு சொந்தமாக சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் உள்ள ஏசி, டேபிள், ஃபேன் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் நீதிமன்றப் பணியாளர்கள் பொருட்களை ஜப்தி செய்ய சென்ற போது சந்திரசேகரின் அலுவலக பணியாளர்கள் ஜப்தி செய்ய விடவில்லை. இதனையடுத்து காவல்துறை உதவி உத்தரவு வழங்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement