அஜித்துடன் 'தீனா','பரமசிவன்' என்று இரண்டு படங்களில் நடித்த லைலா, சூர்யாவுடன் 'உன்னை நினைத்து' படத்திலும் நடித்திருந்தார். ஆனால், இந்த படத்தில் முதன் முதலில் நடிகர் விஜய் தான் நடிக்கவிருந்தாராம்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதுகுறித்து தெரிவித்த நடிகை லைலா, உன்னை நினைத்து’ படத்துல முதலில் விஜய் சார்தான் ஹீரோவா கமிட்டாகியிருந்தார். அந்தப் படத்துக்காக ஒரு பாடலை ரெண்டுநாள் ஷூட் பண்ணாங்க. பிறகு சில பிரச்னைகளால விஜய் அந்தப் படத்துல விஜய் சார் நடிக்கல.
நான் அவர்கிட்ட, ‘உங்க ஒருத்தரோடதான் ஷூட்டிங் வரைக்கும் வந்து என்னால நடிக்க முடியாமப்போச்சு. கண்டிப்பா ஒருநாள் உங்ககூட நடிப்பேன்’னு அடிக்கடி சொல்லியிருக்கேன். அது இப்போவரை நடக்கலை. செகண்ட் இன்னிங்ஸ்ல லக் இருக்கான்னு பார்ப்போம் என்று கூறியுள்ளார் லைலா.சினிமாReading time · 1 min





