விஜய் சேதுபதி , அதர்வா நடித்திருந்தாலும் இதில் ஹீரோ என்னவோ நடிகை நயன்தாரா தான். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஆக்ஷன், ட்ராமா, காதல் என்று ஒரு தரமான படமாக இந்த படம் அமைந்துளளது.
சமீபத்தில் இந்த படத்தின் ப்ரெஸ் மீட் நிகழ்ச்சியில் பங்குபெற இயக்குனர் அஜய் ஞானமுத்து, தனது முதல் படத்தை பார்த்துவிட்டு நடிகர் விஜய்யிடம் பெற்ற பாராட்டு குறித்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் முதல் படமான அஜய் ஞானமுத்துவின் "டிமாண்டி காலனி " படத்தை நடிகர் விஜய்க்கு சிறப்பு காட்சியாக போட்டு காண்பித்தார்களாம். நடிகர் விஜய் அந்த படத்தை பார்த்துவிட்டு, இயக்குனரை கட்டிப்பிடித்து படம் மிகவும் நன்றாக இருக்கிறது பின்னிட்டீங்க என்று பாராட்டியிருந்தார். என்று, இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்திருக்கிறார்.




