கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜய் அரசியலில் குதிக்கப்போகிறார் என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு தான் வருகிறது. அதற்கு ஏற்றார் போல் தான் சமீப காலமாக விஜய்யின் செயல்பாடுகளும் இருக்கின்றது. சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ – மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்கி இருந்தார்.இந்த விழாவில் விஜய் அவர்கள் மாணவர்களின் எதிர்காலம், கல்வி, அரசியல், தலைவர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசி இருந்தார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள நிர்வாகிகளை சந்தித்து பேச ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார். முதல் நாள் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நடிகர் விஜய் தன்னுடைய இன்னோவா காரில் வந்ததோடு நீல நிற சட்டையை அணிந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் இரண்டாவது நாள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற விஜய் ஒரு பச்சை நிற சட்டையை அணிந்திருந்தார். அந்த சட்டை அன்னையர் தினத்தின் போது விஜயின் தாயார் ஷோபா அவரே கடைக்குச் சென்று எடுத்த சட்டை என்பது தெரிய வந்திருக்கிறது.
தளபதி விஜய்க்கு அவருடைய பெற்றோருக்கும் கடந்த சில வருடங்களாகவே கருத்து வேறுபாடு இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. விஜய் அரசியலுக்கு வருவதாக சர்ச்சைக்குரிய வார்த்தைகளை அவருடைய தந்தையும் நடிகரும் இயக்குனருமான சந்திரசேகர் கூறியதை அடுத்து விஜய் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அப்போதிலிருந்து விஜய்க்கும் எஸ்ஏ சந்திரசேகருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
Today #Thalapathy @actorvijay Anna Weared The Shirt Gifted By His Mother Shoba Amma 🥺❤️ Share This To The Persons Who Says #ThalapathyVijay Does Not Respect His Parents ! 🫶
— DHANUSH (@D_H_A_N_U_SHO07) July 12, 2023
Always He Respecting Together Of Parents Everyone 😭🙏 #Vijay #Leo #Thalapathy70 #VijayMakkalIyakkam pic.twitter.com/caCpe9ravu
இதனால் சில ஆண்டுகள் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை என்றும் கூறப்பட்டது. அதிலும் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் ரசிகர் மன்ற தொடர்பாக நபர்கள் போட்டியிடுவதற்கு விஜய் கண்டித்து போட்டியிட்ட நபர்கள் மீதும் தன் தாய், தந்தை மீதும் புகார் அளித்திருந்தார். இது அப்போது சோஷியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து தந்தை எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் தாயார் ஷோபா இருவரும் விஜய் வீட்டிற்கு வருவதில்லை என்றும் விஜயுடன் பேசுவதில்லை என்றும் கிசுகிசுக்கப்பட்டது. விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே பெற்றோர்களை சந்திக்கவே இல்லை, பேசவே இல்லை என்றும் கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் விஜய் தன் தாயார் சோபாவை சந்தித்து இருக்கிறார். அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயிரம் சட்டை இருந்தாலும் #அம்மா வாங்கிக் கொடுத்தது எப்பவும் ஸ்பெஷல்
— 𝐑𝐚𝐣𝐤𝐮𝐦𝐚𝐫 𝐘𝐔𝐕𝐈 𝐕𝐉 (@SRKRAJKUMAR12) July 12, 2023
Thalapathy #Vijay @actorvijay na #Shoba ma #Varisu #Leo pic.twitter.com/zCmGJKXjMu
மேலும், வாரிசு படத்தின் இசை வெளியிட்டு விழாவில் விஜய் தன் பெற்றோர்களை கவனிக்கவில்லை என்று கூறி புது சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து விளக்கமளித்த ஷோபா வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாங்கள் சிறப்பு விருந்தினராக தான் சென்றிருந்தோம். அங்கு விஜய் ரசிகர்களை கவனிப்பது தான் வேலையே தவிர எங்களை இல்லை. அதனால் நாங்கள் எல்லோருடனும் ஒன்றாக இருந்தோம். நாங்கள் வீட்டில் தினமும் பேசி கொள்கிறோம், பார்க்கிறோம். அதனால் பொதுவெளியிலும் அவர் எங்களை கவனிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது’ என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் அம்மா பரிசாக கொடுத்த சட்டையை அணிந்து தற்போது சர்ச்சைகளுக்கு மீண்டும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய்