இவருக்கு கிடைக்கும் பணம் மற்றும் பொருளாதாரத்தை இவர் மட்டும் அனுபவிப்பது இல்லை. மற்றவர்களுக்கும் கொடுத்து உதவுகிறார். சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் கிடைத்த ₹50 லட்சம் பணத்தை நீட் தேர்வின் கொடூரத்தால் உயிரிழந்த மாணவி அனிதாவின் பெயரில் கலவி உதவிக்காக அறியலூர் மாவட்டத்திற்கு கொடுத்தார்.
அதே போல தான் தற்போது ஒரு நற்காரியம் சேர்த்துள்ளார் விஜய்சேதுபதி. கேன்சரை பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை மரன்னத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதனால் அந்த சிறுவனை மகிழ்விக்க மால், தியேட்டர் என அவனுக்கு பிடித்த இடங்களுக்கு எல்லாம் அழைத்து சென்று சந்தோசப்படுத்தியுள்ளனர். அப்போது ஒரு மாலில் அந்த சிறுவனைக் கண்ட விஜய்சேதுபதி அவனிடம் மகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.
பின்னர் மரணத்தருவாயில் படுக்கையில் இருந்த அந்த குழந்தை சாகும்போது, விஜய்சேதுபதியுடன் பேசியதை நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறான். பின்னர் அந்த சிறுவன் இறந்துவிட்டான்.இது போல பலரை எப்படியாவது இருக்கும் வரை மகிழ்ச்சியாக வைக்கும் நல்ல மனது விஜய்சேதுபதியிடம் உள்ளது என பலர் மனம் உருக கூறுகின்றனர்.சினிமாReading time · 1 min





