`இரும்புத்திரை 2' படத்துக்காக நான் ஆர்வமா காத்துக்கிட்டு இருக்கேன். நான் கட்சி கட்சினு போயிட்டா, `படத்தை முடிக்க முடியாது'னு ஆர்.கே.நகர் தேர்தல்ல மித்ரன் என்னை நிற்கவிடலை.
கிட்டத்தட்ட ஏழு வருடம் கழிச்சு அந்த இயக்குநர், `இரும்புத்திரை' மூலமா தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியிருக்கார். அந்த ஒளிப்பதிவாளர் ஜார்ஜ், அந்த எடிட்டர் நான்தான். இந்தக் கதை வேற யார் கைக்குப் போயிருந்தாலும், இரும்புத்திரை `ஈயத்திரை'யாகவோ `பிளாஸ்டிக் திரை'யாகவோ மாறியிருக்கும்!" என்றார்.
மேலும் பத்திரிகையாளர்கள் கேட்ட, லைகா, நடிகர்கள் சங்கக் கட்டடம், விஷால் திருமணம் குறித்து கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். "சங்கக் கட்டடம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும். அதற்கடுத்துதான் கல்யாணத்தைப் பற்றி யோசிக்கணும். தமிழ் ராக்கர்ஸ், லைகா நிறுவனத்துடையதுனு சொல்றதுக்கு எந்தவொரு ஆதாரமும் நம்மகிட்ட இல்ல. அதனால அதைப் பற்றி எதுவும் பேச வேண்டாம்!" என்று முடித்தார் விஷால்.




